வன விலங்குகளால் ஏற்படும் உயிர் மற்றும் சொத்து இழப்பைத் தடுக்க நிலையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்ற, சேதங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை இரட்டிப்பாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் கட்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளதாக தெரிவித்த முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, கொரோனா வைரஸ் தொடர்பான ஜனாதிபதி செயலனியை நீக்கிவிட்டு,  அதன் பணிகளை அமைச்சரவைக்கு வழங்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவோமெனவும் தெரிவித்தார்.

சிரேஸ்ட்ட அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான குசல் பெரேரா வலியுறுத்துகிறார்.சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்ட போது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களை தடை செய்ய அல்லது கட்டுப்படுத்த இந்நாட்டில் எவ்வித சட்டரீதியான வழியும் இல்லையென அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா கூறுகிறார்.

இலங்கை இராணுவத்திற்கு தலைக்கவசங்களை (HELMET)  வழங்குவதற்கான ஒப்பந்தம் சீன நிறுவனத்திற்கு அரசாங்க நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவு குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

கொழும்பில்  களுபோவில மருத்துவமையில் கொரோனா  தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாகவும், அங்குள்ள நோயாளிகளுக்கு வழங்குவதற்கு ஒட்சிசன் பற்றாக்குறை நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவ ஜனாதிபதியாக இருந்தபோது அவரது தொழிற்சங்க ஆலோசகரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவைக் கொலைசெய்ததற்காக துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கவால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க இடைக்கால தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக போராடும் தொழிலாளர் தலைவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அரசின் முயற்சியை தொழிற்சங்கத் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

நேற்று (03) பாராளுமன்றத்திற்கு அருகாமையில் நடைபெற்று கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டமைக்காக கைது செய்யப்பட்ட தொழிலாளர் போராட்ட மத்தியநிலையத்தின் அரசியல் செயற்பாட்டாளர்களான சமீர கொஸ்வத்த மற்றும் கோஷிலா ஹன்ஸமாலி ஆகியோர் இம்மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி