நேற்று (03) பாராளுமன்றத்திற்கு அருகாமையில் நடைபெற்று கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டமைக்காக கைது செய்யப்பட்ட தொழிலாளர் போராட்ட மத்தியநிலையத்தின் அரசியல் செயற்பாட்டாளர்களான சமீர கொஸ்வத்த மற்றும் கோஷிலா ஹன்ஸமாலி ஆகியோர் இம்மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிருவரும் வீட்டிலிருந்தபோது நேற்றிரவு கைது செய்யப்பட்டு தலங்கம பொலிஸூடக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, கடமையிலிருந்த பொலிஸாருக்கு இடையூறு செய்தமை ஆகிய குற்றங்களின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட இருவரையும் இம்மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி