ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக நீதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீண்டும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்ற ஜனாதிபதி செயலணி மூலம் நாட்டுக்குத் தீ வைக்க அரசு முடிவெடுத்துள்ளது என பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல (Laxman Kiriella) தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான முதல் கட்ட நடவடிக்கைகள் எடுக்க தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.

பர்கினோ பசோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.

இலங்கையின் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை வரை வடகிழக்கு மாகாணங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா கூறியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தை ஹொரணை, மில்லேவ பகுதிக்கு மாற்றுவது தொடர்பில் உரிய தகவல்களை வழங்காவிடின் கடுமையான பொது மக்கள் போராட்டம் ஏற்படும் என பிரதமரின் கீழ் இயங்கும் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் தக்காளி ஒரு கிலோ 85 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையின் அனுமதியுடன் நவம்பர் 27ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம் என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் குடிப்பரம்பலை மாற்றும் முயற்சி குறித்து இன்றும் நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி