ஜனாதிபதித் தேர்தலின் இறுதி

முடிவுகள், இரண்டாவது விருப்பத் தேர்வு எண்ணிக்கைக்கு நகர்ந்தாலும் செப்டம்பர் 22 ஆம் திகதிக்குள் அறிவிக்க முடியுமென  எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்தார்.

இறுதி அறிவிப்புக்கான சரியான காலவரையறையை தன்னால் வழங்க முடியாத நிலையில், அந்த நடவடிக்கையை அன்றைய தினத்துக்குள்  நிறைவு செய்ய ஆணைக்குழு இலக்கு வைத்துள்ளதாக ரத்நாயக்க தெரிவித்தார்.
 
2024 ஜனாதிபதித் தேர்தல் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு முன்னேறும் என்று பல தகவல்கள் ஊகிக்கின்றன.
 
நாட்டின் தேர்தல் விதிகளின்படி, ஒரு வேட்பாளர் ஜனாதிபதி பதவிக்கு தெரிவீவதற்கு மொத்த வாக்குகளில் 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். 
 
எந்தவொரு வேட்பாளரும் இந்தப் பெரும்பான்மையை அடையவில்லை என்றால், முதல் இரண்டு வேட்பாளர்களைத் தவிர மற்ற அனைவரும் நீக்கப்படுவார்கள், மேலும் நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச்சீட்டில் இருந்து இரண்டாவது விருப்பத் தேர்வுகள் மறுபகிர்வு செய்யப்படும்.
 
இரண்டாம் விருப்பு வாக்களிப்பில் முன் அனுபவம் இல்லாவிட்டாலும், தேர்தல் அலுவலர்கள் இந்த செயல்முறையை கையாள்வதில் முழுமையாக பயிற்சி பெற்றுள்ளதாக ரத்நாயக்க பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.
 
இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணும் பட்சத்தில், மாவட்டம் ரீதியாக முடிவுகள் அறிவிக்கப்படும்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி