1200 x 80 DMirror

 
 

 அரச, தனியார், அரை அரச, பொது மற்றும் தோட்டத் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 1000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் அரசுக்கு எதிராக பாரிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

நாட்டில் இன ஐக்கியம் உருவாகியுள்ளதாயின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் சிங்கள, முஸ்லீம் மக்களும் கலந்துகொள்ளவேண்டுமென வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தமிழ் அரசியல் கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.

இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார நெருக்கடி, வருங்காலத் திட்டம், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பிபிசி தமிழுக்கு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பேட்டி அளித்துள்ளார்.


பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பதில் பதிவாளர் உட்பட பொறுப்பு வாய்ந்த மூவர் அரச சொத்துக்களையும், மனித வளங்களையும் துஷ்பிரயோகம் செய்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு எதிராக பல்கலைக்கழகத்தின் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

சர்வதேச நிதி தரப்படுத்தல் நிறுவனமான Standard and poor’s (S&P), தெரிவு செய்யப்பட்ட கடனை திருப்பிச்செலுத்த தவறும் அபாயமுள்ள நாடாக இலங்கையை பெயரிட்டுள்ளது.

தற்போதைய பாராளுமன்றத்திற்குள் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என கூறியுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுத் தேர்தலுக்கு செல்வதே தற்போதுள்ள நெருக்கடியில் இருந்து மீள ஒரே வழி என தெரிவித்துள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறைகளுக்கு தேவைப்படும் எரிபொருளை தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கும் பெட்ரோலிய உற்பத்திச் சட்டத்தின் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர், பெருந்தோட்டத்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

தான் ஒரு போதும் பதவி  விலகத் தயாராக இல்லை என்றும், எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைக் காட்டினால் மட்டுமே பதவி விலகத் தயார் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.


கொழும்பு - காலி முகத்திடலில் “கோட்டா கோ கம“ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டம் இன்று செவ்வாய்கிழமை 18 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி