பதுளை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!
பதுளை சிறைச்சாலையில் கைதி ஒருவர், சுருக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று, இன்று இடம்பெற்றுள்ளது.
பதுளை சிறைச்சாலையில் கைதி ஒருவர், சுருக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று, இன்று இடம்பெற்றுள்ளது.
யாழ். மாநகர சபை எல்லைக்குள் எச்சில் துப்பினால் 2ஆயிரம் ரூபாவும், வீதிகளில் கழிவுகளை வீசினால் 5ஆயிரம் ரூபாவும் தண்டமாக அறவிடப்படும் என யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
வரும் நாட்களில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதியாகும், எந்தத் திகதியில் கொரோனா உச்சம்பெறும், பயணங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுமா என்ற சந்தேகங்களும் அச்சமும் சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல, உலகின் பிரமாண்டமான விளையாட்டுத் திருவிழாக்களில் ஒன்றான ஐபிஎல் போட்டிகளை நடத்துவோருக்கும் இருக்கிறது.
உலக திருமதி அழகியான இலங்கையின் கரோலின் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த (ஏப்ரல் 7) ம் திகதி தொழிலாளர் போராட்டத்தின் போது பொலிசாரால் கைது செய்யப்பட்ட சுதந்திர ஊடகவியலாளர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்காமைக்கு எதிராக மருதானை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின்நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பலவந்தமாக பறிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி எதிரணியினர் சபைக்குள் எதிர்ப்பு
நச்சு உணவுகளை இறக்குமதி செய்வதில் உள்ள அனைத்து தவறுகளையும் மறைத்து இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் சித்திகா சேனாரத்னவை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
லண்டன் நகரத்தில் உள்ள பிரிட்டனுக்கான மியன்மார் தூதரகத்திலிருந்து, அந்நாட்டின் தூதர் வெளியேற்றப்பட்டார்.க்யாவ் ஸ்வார் மின் பிரிட்டனுக்கான மியன்மார் தூதர். மியன்மார் தூதரகத்தின் ராணுவ அதிகாரி (Military Attache) மற்ற தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு கூறியுள்ளார். மேலும், இனி க்யாவ் ஸ்வார் மின் மியன்மார் நாட்டின் பிரதிநிதி அல்ல எனவும் அந்த ராணுவ அதிகாரி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் அடுத்தவாரத்தில் இருந்து எல்லையற்ற இணைய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக தொலைத்தொடர்புகள் மற்றும் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்கவுடன் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் அரச வங்கி உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஒரு மணி நேர பணி பகிஸ்கரிப்பினை மேற்கொண்டதுடன் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற மகுடத்தை சூடியுள்ள ஊடகவியலாளர்கள் வழங்கும் செய்திகள் எவ்வாறு அமைய வேண்டும்? இலங்கை போன்ற ஒரு நாட்டில் பல்லின, பல்கலாசார, பலமதங்களை பின்பற்றும் நிலையில், முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை முன்வைக்கலாமா?
ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. இதில் சுமார் 71.43 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
சுங்கத் திணைக்களத்தால் சந்தைக்கு விடப்பட்ட 7200 பொருட்களில் 5800 பொருட்கள் எந்தவொரு பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை என கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் மேம்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நேற்று (6) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.