தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற பயணக்கட்டுப்பாடுகள், கொவிட் தொற்று நாட்டில் அபாயகரமானதாக இல்லை என்று சுகாதாரத்துறையினர் பரிந்துரை செய்தால் மாத்திரமே தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை இன்று தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள பரிந்துரைகளுக்கமைய பயணக்கட்டுப்பாடுகள் வரும் 14ஆம் திகதியே நீக்கப்படும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.

இருந்த போதிலும், தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்ற 77 கிராம சேவகப் பிரிவுகள் விடுவிக்கப்பட்ட போதிலும் அங்கு உள்ள மக்களும் பயணக்கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி