இலங்கையில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு கருவியாக பொலிஸ் மற்றும் நீதித்துறை செயற்படுகிறதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக நீதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீண்டும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்ற ஜனாதிபதி செயலணி மூலம் நாட்டுக்குத் தீ வைக்க அரசு முடிவெடுத்துள்ளது என பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல (Laxman Kiriella) தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான முதல் கட்ட நடவடிக்கைகள் எடுக்க தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.

பர்கினோ பசோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.

இலங்கையின் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை வரை வடகிழக்கு மாகாணங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா கூறியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தை ஹொரணை, மில்லேவ பகுதிக்கு மாற்றுவது தொடர்பில் உரிய தகவல்களை வழங்காவிடின் கடுமையான பொது மக்கள் போராட்டம் ஏற்படும் என பிரதமரின் கீழ் இயங்கும் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் தக்காளி ஒரு கிலோ 85 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையின் அனுமதியுடன் நவம்பர் 27ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம் என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் குடிப்பரம்பலை மாற்றும் முயற்சி குறித்து இன்றும் நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பல்கேரியாவின் போஸ்னெக் கிராமம் அருகே பேருந்தில் தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை 

யாழ்ப்பாணம்- கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக துப்பரவு பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது.

பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் மூலம் நோயாளர்களுக்கு உகந்த சேவையை வழங்க தவறியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி