பாகிஸ்தான் – சியல்கோட்டில் சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட இலங்கை முகாமையாளர் பிரியந்த குமாரவின் சடலம் நாளை (06) நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி பெலிக்ஸ் சிசெகெடி, அரசுக்குச் சொந்தமான சுரங்க நிறுவனத்தின் தலைவரை பதவி நீக்கம் செய்துள்ளார்.

தெரணியகல- மாலிபொட பொத்தெனிகந்த பிரதேசத்தில் தனியார் பாடசாலை ஒன்றுக்குரிய பஸ் தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளராகச் சம்பிக்க ரணவக்க போட்டியிட்டால் சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa) போல் நிச்சயம் படுதோல்வியடைவார் என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன(Rohitha Abegunawardhana) தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையின் 42 ஏக்கர் காணியை கலப்பு அபிவிருத்தி திட்டத்துக்காக நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை மீண்டும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவர் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதுடன், அவர் பிரிட்டனுக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்படவேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மான் (Bob Blackman)பிரித்தானிய வெளிவிவகாரச்செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இராஜினாமா செய்வதை தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வலுசக்தி விநியோகத்தில் பங்களிக்கும் சீனாவின் திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.நிதியமைச்சர் பசில் ராஜபக்விற்கும் இந்திய நிதியமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்பின் போது கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

ஒரு வருடத்திற்கும் மேலாக காவல்துறை காவலில் உள்ள தனது மகனின் உயிரைக் காப்பாற்ற தென்னிலங்கையில் தாய் ஒருவர் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை நாடியுள்ளார்.

தொழிற்சங்கம் அமைப்பதில் ஈடுபட்ட காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு,  நிறுவன அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து, கம்பஹா மாவட்டத்தில் உள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வியட்நாம் நாட்டில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் காணாமல் போய் உள்ளனர் என கூறப்படுகிறது.

யாழ்.வடமராட்சி, சுப்பர்மடம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் உருக்குலைந்த நிலையில் இன்று கரையொதுங்கியுள்ளது.

அமைச்சர்களின் வீடுகளில் எரிவாயு அடுப்பு வெடித்தால் நல்லது என்று நான் நினைக்கின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன (Samantha Vidyaratna) தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் அரசை விமர்சிக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் அரசின் திட்டம் சட்டவிரோதமானது என்பதோடு, அரச சேவையில் உள்ள தொழிற்சங்கத் தலைவர்களின் கருத்து வெளிப்பாட்டிற்கு எதிரான விடயம் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி