இறுதி யுத்த காலத்தில் புதைக்கப்பட்டதாக கருதப்படும் புலிகளின் தங்கம் தேடிய சம்பவம் தொடர்பில் சரத் வீரசேகரவின் அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொது பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர், உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எரிவாயு தொடர்பான பிரச்சினை முழு நாட்டுக்காமான பிரச்சினையாக உருவாகியுள்ள நிலையில் அரசு அதற்குப் பதிலளிக்க முடியாமல் திணறுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே (Hesha Withanage) தெரிவித்துள்ளார்.

மதக் குழுக்களுக்கு இடையில் பகைமையை தூண்டிய குற்றச்சாட்டில் 8 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சீனா முன்னெடுத்து வரும் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்துக்கு கச்சிதமான மாற்றாக, 300 பில்லியன் யூரோ மதிப்பிலான உலகலாவிய முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம். அத்திட்டத்துக்கு 'குளோபல் கேட்வே' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு (WHO) கொவிட் வைரசின் ஐந்தாவது அலை உலகளாவிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக  எச்சரித்துள்ளது, ஆனால் சுகாதார அமைச்சர் வரவுசெலவு திட்டத்தில் சுகாதார சேவைக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கொள்ளுப்பிட்டியை சுற்றியுள்ள வீதிகளில் வாகன நெரிசல் காரணமாக கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் தாமதமாகி ஆரம்பித்ததாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் முற்போக்கு கூட்டணி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின பெண் ஒருவர் நிராயுதபாணியாக நின்று சிறுத்தையுடன் சண்டையிட்டு தன் 6 வயது மகனை அதன் பாதங்களில் இருந்து பத்திரமாக மீட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாதகல் பிரதேசத்தில் கடற்படையினரை ஈடுபடுத்தி தனியார் காணிகளை வலுக்கட்டாயமாக கையகப்படுத்த மேற்கொண்ட முயற்சியை பெண்கள் உட்பட பிரதேச மக்கள் தோற்கடித்துள்ளனர்.

பெலாரூஸுக்கு வந்த ஆயிரக்கணக்கான குடியேறிகளுள் இராக்கைச் சேர்ந்த ஒரு யசீதி தம்பதியும் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை கடக்கும் நம்பிக்கையில் பெலாரூஸ் நாட்டிற்கு பயணம் செய்தார்கள். எல்லைகளில் மூன்று கொடூரமான வாரங்களை கடந்த பின்னர், அவர்கள் தாயகம் திரும்பினர்; அவர்களின் சேமிப்புகள் செலவழிந்து விட்டன; ஆனால், அவர்கள் மீண்டும் முயற்சி செய்ய உறுதியாக உள்ளனர். இது குறித்து லினா ஐஸ்ஸாவும் பீட்டர் பாலும் எழுதுகின்றனர்.

முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, (Arjuna Ranatunga) ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து அர்ஜூன ரணதுங்கவின் அடுத்த அரசியல் தரிப்பிடம் எது என்ற கேள்வி எழுந்துள்ளது.

உகாண்டாவை போலவே சீனாவின் கடன் இலங்கையை விழுங்கிக்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

‘ஒமிக்ரோன்” புதிய வைரஸ் திரிபு பரவக் கூடிய ஆபத்து இருக்கும் நிலையில் உலக எரிபொருள் விலை 10 வீதத்தினால் சரிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தின் பின்பு உலக எரிபொருள் விலை ஒரே நாளில் அதிக வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பம் இதுவாகுமெனவும் கூறப்படுகிறது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி