ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நைஜீரிய அரசாங்கம் படுகொலைகளை கட்டவிழ்த்து விடுகிறது!
நைஜீரியாவின் அரசாங்கம் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நாட்டை உலுக்கிய பொலிஸ்-விரோத மிருகத்தன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக கொடிய வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. செவ்வாயன்று இரவு, அது முன்னாள் ஜெனரலும் ஆட்சிக் கவிழ்ப்பு குழுவின் தலைவருமான ஜனாதிபதி முகம்மது புஹாரி தலைமையிலான ஊழல் மலிந்த முதலாளித்துவ அரசின் ஆட்சிக்கு பெருகிய முறையில் நேரடி சவாலாக முன்வந்த ஒரு இயக்கத்தை அடக்குவதற்கு, அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை படுகொலை செய்ய நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்த படையினரை அனுப்பியது.