1200 x 80 DMirror

 
 

பேராசிரியர் கொல்வின் ஆர்.டி சில்வாவின் கருத்துப்படி, தற்போதைய அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் நாட்டைக் காப்பாற்றுவது கடினமானது என மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் விவாதிக்கப்படாமலேயே நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் நீக்கப்பட்டு 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியை நியமித்தமை கேலிக்கூத்தான செயல் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் ஏனைய காடுகள் விடுவிப்பு திட்டத்திற் கீழ் வெருகல் பிரதேசத்தில் ஏற்கனவே முன்னர் பயிர் செய்த 600 ஏக்கர் அளவிலான காணிகள் இம்முறை பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்காக மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.நீர்கொழும்பு, வத்தளை, ஜா-எல பிரதேசங்களில் உள்ள முத்துராஜவெல ஈரநிலத்திற்கு சொந்தமான 3,000 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் சுவீகரிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மற்றும் பல உலக நாடுகளில் கோவிட்-19 அச்சம் காரணமாக முகக்கவசம் அணிவது சிறார்கள் மத்தியிலும் பரவலாகக் காணப்படுகிறது. வைரஸுக்கு எதிரான ஒரு வகைப் பாதுகாப்பு வழங்குவதைத் தாண்டி, அவர்களின் நீண்ட நாள் வளர்ச்சிக்கு இது ஒரு சவாலாக இருக்கவும் வாய்ப்புள்ளதா?

நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தனது அமைச்சுப் பதவியிலிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவிடம் கையளித்த கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவில்லையென செய்திகள் கூறுகின்றன.

நிராகரிக்கப்பட்ட சீன சேதனப் பசளையை ஏற்றிய ஹிப்போ ஸ்பிரிட் (Hippo Spirit) கப்பல், தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் காணப்படுகின்றமை, சர்வதேச கடல் போக்குவரத்து இணையத்தளத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர் அதிபர் போராட்டம் சம்பந்தமாக அரசாங்கம் நெகிழ்வுத் தன்மையை காட்டாத போதிலும் பிற துறைகளில் உழைக்கும மக்களின் ஆதரவை தெரிவிப்பதற்காக நவம்பர் 09ம் திகதி தேசிய எதிர்ப்பு தினமாக பெயரிடப்பட்டுள்ளது.

இரண்டு ஜனாதிபதிகளினதும், ஒரு பிரதமரினதும் ஆலோசகராக இருந்தவரும், நிதியமைச்சின் முன்னாள் செயலாளருமான ஆர். பாஸ்கரலிங்கம் தனது சொத்துக்களை இரகசியமாக மறைத்து வைத்துள்ளதாக புலனாய்வு ஊடகவியலாளர்களின் கூட்டமைவு வெளியிட்ட ‘பண்டோரா ஆவணங்கள்” வாயிலாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ள தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கேட்டு பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி