இலங்கை அரசியலில் ஒரு புரட்சிகரமான நபர் கிங் மேக்கர் என்று அறியப்பட்ட சர்ச்சைக்குரிய நபரான மங்கள சமரவீர இன்று (ஆகஸ்ட் 24) கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

அரச வாகனங்களில், சீருடையுடன் தமது பிரதேசத்திற்கு வெளியே சென்று, பீடாதிபதிகளை சந்தித்து, ஊடகங்களின் முன்னிலையில் மிகவும் ஒழுக்கேடான முறையில் கருத்துகளை வெளிப்படுத்திய உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக காவல்துறை ஆணைக்குழு விசாரணை நடத்த வேண்டுமென, முன்னாள் அரச மற்றும் காவல்துறை அதிகாரிகள் குழு, பரிந்துரைத்துள்ளது.

கட்டாய தடுப்பூசிகள் மற்றும் தடுப்பூசி போடப்படாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்வதைத் தடுக்கும் விதிமுறைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யபோவதாக சிங்கள ராவய அமைப்பு அறிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் மகாநாம சமரவீர மற்றும் கேமா பத்மாவதி சமரவீர ஆகியோருக்கு ஏப்ரல் 21, 1956 பிறந்த மங்கள சமரவீர இன்று 65 வயதும் 4 மாதமும், 3 நாட்களும் பூர்த்தி அடைந்த நிலையில் அவரின் இறுதி பயணத்தை மேற்கொண்டார் அவர் தனது வாழ்க்கையை மட்டுமல்ல, நமது வருங்கால அரசியலில் எஞ்சியிருக்கும் கடைசி நம்பிக்கையையும் விட்டுச் செல்கிறார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆடைத் தொழிற்சாலைகளின் பணியாற்றும் அனைவரையும் பணியாற்ற அழைக்க முடியாமையால் கிடைத்திருக்கும் ஓடர்களை சரியான நேரத்தில் வழங்க முடியாமல் ஆடைத் தொழில் துறை பாதிக்கப்படக் கூடுமென தைத்த ஆடைகள் ஏற்றுமதி வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் ஹேமந்த பெரேரா கூறுகிறார்.

கொம்பனி வீதியில் உள்ள 150 ஆண்டுகள் பழமையான டி சொய்சா கட்டிடம் நகர அபிவிருத்தி ஆணைக்குழுவால் இடிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் நான்கு மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன.50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும், ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

கொரோனாவுக்கு எதிராக நோய்த் தடுப்பாற்றலை மேம்படுத்திக்கொள்ள எந்தப் பாதை சரியானது?கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டபிறகும் இத்தகைய மாற்றங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படுகின்றன.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி