1200 x 80 DMirror

 
 

இலங்கையில் நாளொன்றுக் குறைந்தது நான்கு பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகும் நிலையில்,  பெண்களுக்கான கட்டணமில்லா உதவி தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் அரச பாதுகாப்புப் படையினரால் ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாக, தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்படுகின்ற நிலையில்,  சித்திரவதை செய்யப்பட்டமைத் தொடர்பில் தென்னிலங்கையின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ். காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட வேரப்பட்டி கிராம சேவகர் பிரிவில் தொல்பொருள் சின்னம் இருப்பதாக தெரிவித்து அதனை பார்வையிடுவதற்காக இன்றைய தினம் அங்கு விஜயம் செய்யவுள்ள தொல்பொருள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் (Vidura Wickramanayaka) வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஒன்றுகூடியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக வேலையற்ற ஆயுர்வேத பட்டதாரிகள் இன்றைய தினம் ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

போரினால் இறந்து போனவர்களையும், அதன் விளைவாக பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து இறைவேண்டல் புரிய வடக்கு-கிழக்கு மாகாண கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தீர்மானித்துள்ளது.

பாரிய மணல் அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான ஜனாதிபதியின் செயலாளரினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை நாட்டில் பாரிய சுற்றாடல் பேரழிவை ஏற்படுத்தும் என இலங்கையின் முன்னணி சுற்றாடல் அமைப்பு எச்சரித்துள்ளது.

ராஜபக்ஷ அரசாங்கம் மேற்கு கடற்கரையை தனியாருக்கு விற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் இருந்த முத்துராஜவெல ஈரநில வலயத்திற்குட்பட்ட இந்தப் பகுதியும் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சமகி ஜனபலவேகய பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தியில் உள்ள மாந்தீவு பறவைகள் சரணாலயத்திற்குள் புதிதாக இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் கட்சிகளின் உரையாடல், தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஐக்கியத்தை மென்மேலும் வலுப்படுத்த வேண்டும். அதைவிடுத்து இதன் மூலம் பிளவுகள் அதிகரிக்குமானால், இத்தகைய முயற்சிகளில் பங்குபற்றி காலவிரயம் செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம் விரும்ப மாட்டோம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு சாதகத்தை தரும் வகையிலும் பொதுமக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையிலும் தமது போராட்டம் அமையாது என்று இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி