தகவல் தொடர்பு பிரச்சினை
காரணமாக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறாயின் ஐக்கிய மக்கள் சக்தியில் பணியாற்றுபவர்கள் படிப்பறிவில்லாதவர்களா, காது கேளாதவர்களா என்று நடிகை தமிதா அபேரத்ன கேட்கிறார்.
நேற்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், பொதுத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்தால் கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தேசிய பட்டியலிலிருந்து விலகி, அதற்கு பதிலாக தனது பெயரை உள்ளிட வேண்டும். .
“ஐக்கிய மக்கள் சக்தியில் எழுதத் தெரியாத, பேசத் தெரியாத, காது கேளாத மனிதர்கள் இருக்கிறார்களா என்பதை நான் அறிய வேண்டும் என்றார்.