1200 x 80 DMirror

 
 

ஆளும் கட்சிக்குள் இருக்கும் உறுப்பினர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சர்களுக்கிடையிலான பனிப் போர் தற்போது வெடிக்க ஆரம்பித்துள்ளன.

இதில் இராஜாங்க அமைச்சர் நிமால் லன்சாவிற்கு அரசாங்கத்தில் உள்ள மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் தொலைபேசியில் மிரட்டும் ஒலிப்பதிவொன்று வெளியாகியுள்ளது.

கம்பஹாவில் உள்ள "சிதுசர" என்ற உயர்தர மாணவர்களுக்கான தனியார் கல்வி நிறுவனத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் சிசிடிவி கமரா கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு என்பது தெளிவாகத் தெரிந்தால், தேவைப்பட்டால் அவரைக் கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கொழும்பு மறை மாவட்ட சமூக மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 15 பேரின் பெயர்களை அங்கீகரித்ததன் காரணமாக நீதித் துறையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நீதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்சவின் தனிப்பட்ட முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அரசாங்கத்தை விமர்சித்து சில பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தேசிய மட்டத்தில் அரசியல் பிரச்சாரத்தை அலரிமாளிகையில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் ஊடகங்களுக்கு ஒரு கறுப்பு சகாப்தம் உதயமாவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன கூறியுள்ளார்.


நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமடைந்து வரும் நிலையில் இந்த வருட இறுதிக்குள் அமெரிக்க டொலரின் பெறுமதி 300 ரூபாவை எட்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று டொலருக்கு நிகரான ரூபாயின் பெருமதி உண்மையான 250 ரூபாய். இதனை கட்டுப்படுத்த முடியாது போனால் இந்த ஆண்டு இறுதிக்குள் டொலரை் ஒன்றுக்கான பெருமதி 300 வரை உயரும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்தார்.


எந்தவொரு நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகள் தமது எதிர்பார்களையும் கருத்துகளையும் வெளிப்படுத்திவரும் நிலையில் தேர்தல் ஆணைக்குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.


இலங்கைக்கு போதியளவு டீசல் கையிருப்பு கிடைத்துள்ளதுடன், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி