முகக்கவசம் இல்லாமல் பாதையில் இருந்ததற்காக,தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவர் ஜீப் வண்டியிலிருந்து விழுந்து இறந்துள்ளமை தொடர்பில் பாணந்துரை வடக்கு பொலிஸில் துணை பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் சார்ஜன் ஒருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை ஆபிரிக்க நாடான நைஜீரியா தடை செய்துள்ளது.ட்விட்டர் நிறுவனம் தங்கள் நாட்டு விதிகளை மீறியதாக அந்நாட்டு ஜனாதிபதி முகம்மது புஹாரி குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது அந்த வலைதளத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து எந்த தீர்மானமும் இதுவரை எட்டப்படவில்லை என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சினோர்ஃபாம் தடுப்பூசி செலுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இலங்கையின் சுகாதார அமைச்சு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளதாக சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் பிரதிநிதியாக லட்சத்தீவில் நிர்வாகியாக இருக்கும் பிரஃபுல் படேல் எடுக்கும் நடவடிக்கைகள் கவலையளிப்பதாக பிரதமர் மோதிக்கு ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். 'பெருநிறுவனங்களின் வளர்ச்சிக்குத் துணை போவதாகவும் உள்ளூர் மக்களை அவர்களுடைய நிலத்தில் இருந்து விரட்டக் கூடிய வகையிலும் அவருடைய செயல்கள் உள்ளன' எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடாளுமன்றம் இந்த வாரம் ஒரு நாள் மட்டும் கூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஜெரூசத்தில் அல் ஜசீரா செய்தி ஊடகத்தின் பெண் நிருபர் உட்பட 2 பேரை இஸ்ரேல் பொலிஸார் கைது செய்து நீண்ட நேரத்தின் பின் விடுவித்துள்ளனர்.

ஒலுவில் மீன்பிடி துறைமுகம் பலவருடங்களாக உட்புகும் வழி, மண்ணால் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதனால் ஆழ்கடல் மீனவர்கள் அவர்களது குடும்பங்கள் மற்றும் ஏனைய தங்கிவாழும் பல குடும்பங்களும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். சுமார் 265 பெரிய படகுகள் காணப்படுவதுடன் 100 க்கும் கூடுதலான எண்ணிக்கையில் சிறிய படகுகளும் காணப்படுகிறது.

சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சுற்றுசூழலை பாதுகாக்காவிட்டால் உலகம் அதற்கான விலையை கொடுக்க நேரிடும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.  உலக சுற்றுசூழல் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இம்ரான் கான் கூறியதாவது:-  புவி வெப்பமயமாதல் ஒட்டு மொத்த உலக நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ளது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி