பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து எந்த தீர்மானமும் இதுவரை எட்டப்படவில்லை என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

மேலும் ஜூன் 29 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளரை மேற்கோளிட்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு, பாடசாலைகள், முன்பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிரத்தியேக கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி