சுற்றுசூழலை பாதுகாக்காவிட்டால் உலகம் அதற்கான விலையை கொடுக்க நேரிடும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.  உலக சுற்றுசூழல் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இம்ரான் கான் கூறியதாவது:-  புவி வெப்பமயமாதல் ஒட்டு மொத்த உலக நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ளது.

ஆனால் நீர் தேவைக்கு பனிப்பாறைகளை சார்ந்து இருக்கும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எங்களின் 80 சதவீத நீர் தேவை பனிப்பாறைகளை சார்ந்தே இருக்கிறது. ஆனால், பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன.

இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்படும்.  சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு 10 பில்லியன் மரம் நடும் திட்டத்தை ஏற்படுத்தியூள்ளது. 1 பில்லியன் மரக்கன்றுகள் ஏற்கனவே நட்டப்பட்டுள்ளன. அடுத்த 3 ஆண்டுகளில் 9 பில்லியன் மரங்களும் நட்டப்படும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி