இலங்கையை தவிர அனைத்து நாடுகளும் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு அனுமதித்துள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான தடையை எதிர்த்து இன்று (13) மாலை 5.00 மணிக்கு அரசுக்கு எதிராக பொரெல்ல கனத்தை மைதானத்திற்கு முன் அமைதியான போராட்டம் இடம் பெற்றுள்ளது.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு பதில் வருமானத்தை உழைப்பதிலேயே அரசாங்கம் ஆர்வமாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.

வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு கூட்டணி எப்படி அமையும் என்ற கேள்விக்கு, விஜயகாந்த், கமலஹாசன் ஆகியோரது கட்சிகளின் நிலைப்பாடு இரண்டு வெவ்வேறு நிகழ்ச்சிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளிப்பட்டது.

சமகால அரசியல் நிலைமைகள்,முஸ்லிகளின் உடல்களை தகனம் செய்வது தொடர்பில் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பில் கலந்துரையாட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு இன்று நடைபெறுகிறது என, பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம், ஹரிஸ் தெரிவித்தார்.

யானை - மனித மோதலால் உலகில் அதிக எண்ணிக்கையிலான யானைகள் இறக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது என்பது பொதுக் கணக்குகள் பற்றிய குழுவின் கூட்டத்தில் (கோபா) தெரியவந்துள்ளது. யானை – மனித மோதலால் அதிகளவான மனித உயிரிழப்புக்கள் இடம்பெறும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் காணப்படும் நிலையில், முதலாவதிடத்தில் இந்தியா காணப்படுகிறது.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அப்பதவியில் இருந்தும் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார் அத்துடன் கட்சியின் மேலும் சில உறுப்பினர்களும் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளத்தில் வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு தீப்பந்தம் ஏற்றி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. தேசிய மனித உரிமைகள் தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

அனுராதபுரம் மாவட்டத்தில் ஜனவரி மாதம் தொடக்கம் இது வரைக்கும் 200 பேருக்கு எலிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதுடன் அதனால் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் அனுராதபுரம் மாவட்ட தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தேஜன சோமதிலக தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டு கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதன் காரணமாக கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி மாலை முதல் நேற்று 10ம் திகதி 15 வது நாளாகவும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருந்து வருவதனால், இப்பிரதேசங்கள் எங்கும் சனநடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி