(பாறுக் ஷிஹான்)

கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ்

தேவானந்தா  தலைமையில் அண்மையில் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு கலாசார நிலையத்தில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது அவர் அங்கு உரையாற்றுகையில்

1990 ஆண்டு ஆரம்பத்தில் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பகுதியில்  ஈபிடிபி கட்சியின் அரசியல் அலுவலகம் அமைக்கப்பட்டு இப்பகுதி மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வந்தது.

இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக இந்த அலுவலகம் பின்னர் மூடப்பட்டது.

அந்த காலப் பகுதியில் பிரபாகரனின் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பிரபாகரனின் உத்தரவில் ஈபிடிபி உறுப்பினர்களை கொலை செய்ததும் கொல்ல முற்பட்டதும் அவர்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டமையினாலும் இந்த அலுவலகத்தை மூட வேண்டி ஏற்பட்டது.

ஆனால் மிக விரைவில் இந்த மாவட்டத்துக்குரிய அலுவலகத்தை தோழர்களின் உதவியுடன் மீண்டும் திறக்கவுள்ளோம் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி