ஜனாதிபதித் தேர்தலில் உங்களுக்கு

விருப்பமான ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கவோ அல்லது விருப்பங்களைக் குறிக்கவோ முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் இன்று (19) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க வாக்குக் குறிக்கப்பட வேண்டிய விதம் குறித்து விளக்கினார்.

“வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு முன்னால் உள்ள பெட்டியில் எண் 1ஐக் குறிப்பதன் மூலம் ஒரு வேட்பாளர் தனது வாக்கைப் பதிவு செய்யலாம். அதேபோல், எந்தவொரு வேட்பாளருக்கும் விருப்பம் இருந்தால்,  அந்த வேட்பாளர்களுக்கு முன்னால் உள்ள சின்னத்துக்கு அருகில் காணப்படும் பெட்டியில் 2 மற்றும் மூன்றாவது எண்ணைக் குறிப்பதன் மூலம் இரண்டாவது மற்றும்  மூன்றாவது விருப்பைத தெரிவை வழங்கலாம்.

இந்த எண் 1க்குப் பதிலாக X குறியைப் பயன்படுத்த யாராவது நினைத்தால், அந்த வாக்கும் இந்தத் தேர்தலில் செல்லுபடியாகும் வாக்காக ஏற்றுக்கொள்ளப்படும். 

ஆனால் X குறியுடன் வாக்கு வழங்கப்பட்ட பின்னர் விருப்பங்களைக் குறிக்க முடியாது

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி