சமகால அரசியல் நிலைமைகள்,முஸ்லிகளின் உடல்களை தகனம் செய்வது தொடர்பில் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பில் கலந்துரையாட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு இன்று நடைபெறுகிறது என, பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம், ஹரிஸ் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அவ்வாறு செய்யாமல் அடக்கம் செய்ய வேண்டும் என்ற விடயத்தில் எமது கட்சியின் தலைவரும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நாங்களும் அதிக அக்கறையுடன் செயற்படுகிறோம்.

இது தொடர்பில் தொடர்ச்சியாக அரச தரப்புடன் பேசி வருகிறோம். இந்த விடயத்தில் எந்த விட்டுக் கொடுப்புகளுக்கும் இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி