விடுதலையான அரசியல் கைதிகள் தண்டனைக்காலத்தை விடவும் அதிகமான காலத்தைத் தடுப்புக்காவலில் செலவிட்டுள்ளனர்! அம்பிகா சற்குணநாதன் !
அண்மையில் விடுதலை செய்யப்பட்ட பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளில் பெரும்பாலானோர் எதிர்வரும் ஒரு வருட காலத்திற்குள் விடுதலை செய்யப்பட இருந்தவர்களாவர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.