தனது தந்தையை கொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது தொடர்பில் ஹிருணிக்கா பிரேமசந்திர, ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளார்.

"மழையில் கண்ணீரோடு பிரியாவிடை கொடுத்த ஹொங்ஹொங் மக்கள்" என்கிற தலைப்பில் ஆப்பிள் டெய்லி பத்திரிகை தன் வாசகர்களுக்கு நன்றி கூறியது.

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி கிராமத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் மகன் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களால் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படை, ஐக்கிய அமெரிக்காவின் கடற்படை மற்றும் ஜப்பானின் கடற்பாதுகாப்பு தன்னார்வ படையணி ஆகியன இணைந்து நடத்தும் கடற்பயிற்சி, திருகோணமலை கடற்படைத் தளத்தில் இன்று ஆரம்பமானது.

துமிந்த சில்வாவை விடுவிக்க ஜனாதிபதி எடுத்த முடிவு நீதித்துறையை அவமானப்படுத்தும் செயலாகும் எனவும் இந்த நாட்டை சட்டவிரோத நாடாக உலகம் கண்டுகொள்ளும் காலம் உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் சமகி ஜன பலவேகய ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் தேசிய நெடுஞ்சாலைத் துறையை ஏமாற்றி போலி பட்டா மூலம் 200 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?

ஒரு வருட காலத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் உள்ள கவிஞர் அஹ்னாப் ஜசீமை அவரது உறவினர்களும், சட்டத்தரணிகளும் சந்திக்க அனுமதிப்பது உள்ளிட்ட ஏனைய தடுப்புக் காவல் கைதிகளுக்கு வழங்கப்படும் சகல வசதிகளையும் வழங்குமாறு கடந்த 22ம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு சென்றிருந்த பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் பிரதானி பசில் ராஜபக்ஸ இன்று (24)  காலை நாடு திரும்பியுள்ளார்.

தெஹிவளை, நதிமால களஞ்சியமொன்றில் வைக்கப்பட்டிருந்த காலாவதியான மருந்துகள் சந்தைக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்தனவா என்பது குறித்து விசாரணை செய்த பின்னர் அவற்றை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவிருப்பதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை குறிப்பிடுகிறது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா இன்று (24) ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார். இன்று கொண்டாடப்படும் பொசன் போயா தினத்தில் இடம்பெற்றுள்ளது சிறைச்சாலைத் துறை வட்டாரங்களின்படி, 93 கைதிகளுக்கு ஜனாதிபதியால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி