இலங்கை அரசாங்கம் மூன்று நாடுகளிடமிருந்து சுமார் 215 கோடி அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியிடம் கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணித் தொகை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் இவ்வாறு அவசரமாக கடன் பெற்றுக்கொள்ள உள்ளது.

பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்த வரவழைப்பது அமைச்சர்களினதும் நாட்டினதும் அவசரநிலை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறுகிறார், ஆனால் இதுவரை திகதி நிர்ணயிக்கப்படவில்லை என்றும் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருவதற்கான தனிப்பட்ட திகதிகளை சிலர் பெயரிட்டுள்ளனர், ஆனால் மஹிந்த ராஜபக்ஷ வார இறுதி தேசிய செய்தித்தாளிடம், பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை இது செல்லுபடியாகாது என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் அமீர்கான் மற்றும் கிரண் ராவ் திருமணமான 15 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக அறிவித்து உள்ளனர்.பிரபல நடிகர் அமீர்கான் தனது லால் சிங் சதா படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.  இது விருது பெற்ற டாம் ஹாங்க்ஸ் திரைப்படமான பாரஸ்ட் கம்பின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் ஆகும். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இப்படத்தில் கரீனா கபூர் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

டிரான்ஸ்ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 விமானங்களில் ஒன்று நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக போயிங் 737 ரக சரக்கு விமானம் ஒன்று அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே கடலில் இறங்கியது.இந்த நிகழ்வின்போது விமானத்தில் இருவர் இருந்தனர். இவர்கள் இருவருமே அதன் விமானிகள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சித் தலைவர்களுக்கிடையிலான அவசர சந்திப்பொன்று, இன்று பகல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 7 பேருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் தேவை கருதி இடமாற்றங்கள் வழங்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு, நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் ஜனாதிபதி கோட்டாபயவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் நாம் சர்வதேசத்துக்குச் சென்றால் நாட்டு மக்களுக்குத் தான் பாதிப்பை எதிர்நோக்க நேரிடும். ஆனால் ஆட்சியாளர்களுக்கு அது புரியவில்லையெனத் தெரிவித்த முன்னாள் அமைச்சரான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மனைவி சுமனா பிரேமசந்திர இந்த விடுதலை தொடர்பில் விளக்கம் கோரி சட்டத்தரணிகள் சங்கத்தாலும் தனது புதல்வி ஹிருணிகாவாலும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு இதுவரை பதிலில்லை என்றார்.

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் உடன்படும் அனைத்து சிறு கட்சிகளும் இணைத்துக்கொள்ளப்படுதெனத் தெரிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன் எம்.பி, எவரையும் தவிர்த்து விட்டுப் பயணிக்கும் எந்தவிதத் தேவையும் கிடையாது எனவும் தெரிவித்தார்.

Xpress Pearl கப்பல் விபத்திற்குள்ளாதனால் வெளிநாட்டு பணியாளர் இலங்கைக்கு அனுப்பிய ரூ.48 மில்லியம் மதிப்புள்ள பொருட்களும் அழிந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி