இலங்கை உழைப்பாளிகள் வெளிநாடுகளில் பெருந்தொற்றிற்கு இரையாகும் நிலையில் இலங்கை உழைப்பாளிகளை மீண்டும் சௌதி அரேபியாவிற்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர்!
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்நாட்டிற்கு வர வேண்டுமெனக் கேட்ட வெளிநாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான இலங்கை உழைப்பாளிகளின் உரிமை பறிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் சௌதி அரேபியாவிற்கு உழைப்பாளிகளை மீண்டும் அனுப்பத் தொடங்கியுள்ளது.