ஆதிவாசிகளின் பூர்வீக நிலங்களை கையகப்படுத்தும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆதிவாசிகளின் தலைவர் வன்னில எத்தோ மற்றும் சுற்றுச் சூழல் நீதி மையத்தால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காலாகாலமாக எமக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளை இந்த பேரணியுடன் முடிச்சிப்போட்டு எங்களின் ஒற்றுமைக்கு கலங்கம் ஏற்படுத்தக்கூடாது. எமது ஒற்றுமையை குலைத்து விடாது நாங்கள் எல்லோரும் ஒருமித்த வகையில் நியாயமான கோரிக்கைகளை எங்களுக்கிடையே பேசி தீர்த்துக்கொள்ளலாம்.

அடக்குமுறைக்கு தான் அடிபணியப் போவதில்லையென்றும் தொடர்ந்து அரசியலில் ஈடுபடப்போவதாகவும் பெங்களூரிலிருந்து சென்னை திரும்பிக்கொண்டிருக்கும் வி.கே. சசிகலா தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு வெளியே உள்ள தீவுகளில் மீளுருவாக்கக் கூடிய மூன்று  எரிசக்தி திட்டங்களைத் தொடங்க சீன நிறுவனத்திற்கு டெண்டர் வழங்குவதை இந்தியா கடுமையாக எதிர்ப்பதாக ” தி சண்டே டைம்ஸ்” தெரிவித்துள்ளது.

ஆளும் கட்சிக்குள் தனி பிரிவுகளுக்கு இடமில்லை என்று மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உத்தராகண்ட் மாநிலத்தில் சமொலி மாவட்டத்தின் ராய்னி கிராமத்தில் தபோவன் பகுதியில் இன்று (பிப்ரவரி 7, ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட ஒரு பெரிய பனிச்சரிவு மற்றும் அதனால் நதிகளில் உண்டான வெள்ளம் ஆகியவற்றால், இதுவரை குறைந்தது 10 பேர் இறந்துள்ளது உறுதியாகியுள்ளது.

தமிழர்களின் உரிமைகளை கோரும் நோக்குடன் நடத்தப்பட்ட பாரிய போராட்ட பேரணி, இன்றுடன் (பிப்ரவரி 07) நிறைவடைந்தது. கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் முதல் வடக்கு மாகாணத்தின் பொலிகண்டி வரை தமிழர்களின் உரிமைகளை கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.பொத்துவில் பகுதியில் கடந்த 3ம் தேதி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அரச தலைவராக பொறுப்பேற்ற கோதபாய ராஜபக்ஷ அரசியல் அரங்கில் அனுபவம் வாய்ந்த நபர் அல்ல என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.அவர் நாட்டின் தலைமையை ஏற்றுக் கொண்ட பின்னர் அவருக்கு மொட்டின் தலைமை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் கொவிட் தடுப்பூசி பெற்ற பின்னர் இலங்கைக்கு வரும் தொழிலாளர்கள் தாங்களே சுய தனிமைப்படுத்த தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு மத்திய கிழக்கிற்கான இலங்கை தொழலாளர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவையின் மற்றொரு கட்டம் ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்றது.வீரவில – அக்போபுர கிராமத்தில் இன்று நடைபெற்ற இந்த வேலைத்திட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பிரதேச அரசியல்வாதிகள் சிலரும் பங்குபற்றினர்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி