ஐந்தாம் தர புலமைப்பரிசில்

பரீட்சையின் முதலாம் தாளில் இருந்து 3 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடும் பரீட்சை திணைக்களத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (18) பெற்றோர் பரீட்சை திணைக்களத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்யுமாறு  அவர்கள் கோருகின்றனர்.

அதன்படி, எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் சிலர், பரீட்சை திணைக்களத்துக்குள் சென்று கடிதம் ஒன்றை வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. 

பெற்றோர்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருவதாகவும் பொலிஸாரும் கலகத் தடுப்புப் பிரிவினரும் அந்த இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் இலகுவாக எடுத்துக் கொண்டுள்ளார் எனவும் அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அத தெரணவிடம் வினவிய போது, ​​அந்த இடத்தில் இருந்த பெற்றோர்கள் தெரிவித்தனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி