மூன்று முறை தேசிய விருது பெற்ற நடிகை சுரேகா சிக்ரி மரணம்!
மூன்று முறை தேசிய விருது பெற்ற பிரபல நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் காலமானார்.பாலிவுட் படங்கள், இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் சுரேகா சிக்ரி. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேகா இன்று காலை 8.30 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.