சுகாதார அமைச்சின் வேண்டுகோளின் பேரில் ஜூன் 07 ம் தகதி வரை பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதில் கொவிட் செயற்குழு கவனம் செலுத்துவதாக பல அரசு சார்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்னும் இரண்டு வாரங்களுக்கு நாட்டை மூடுமாறு சில மருத்துவ சங்கங்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரித்துள்ளன. இதுபற்றி கொரோனா தொடர்பான ஜனாதிபதி செயற்குழுவிடம் ஏன் விவாதிக்கவில்லை என்பது புதிராக உள்ளது என்று கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயல் மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு பயண அனுமதி வழங்கப்பட்டபோதும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினரின் ஊடகவியலாளர்கள் மீதான கெடுபிடிகள் அதிகரித்துள்ளது.

தனிநபர் வருமானத்தில் இந்தியாவை வங்காளதேசம் பின்னுக்கு தள்ளியுள்ளது.இந்தியாவின் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு கரணமாக பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதித்தது. பெருந்தொற்று காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் எதிர்மறையில் இருந்தது. ஆனால், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான  வங்கதேசத்தின் வளர்ச்சி குறைந்தாலும் எதிர்மறையில் செல்லவில்லை.  இதன் பலனாக தனிநபர் வருமானத்தில் இந்தியாவை வங்காளதேசம் விஞ்சியுள்ளது.

கொரோனா வைரஸ் குறித்த எந்த விடயத்தையும் ஊடகங்களிற்கு தெரிவிப்பதற்கு முன்னர் தன்னிடம் தெரிவிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரச அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாழ்நாள் முழுவதும் அரசியலில் ஈடுபட்ட ஒரு மனிதன் கூட, அவன் கொஞ்சம் அமைதியாக இருக்கும்போது, ​​எல்லோரும் மறந்து விடுகிறார்கள்,

பிபிசி-யுடனான நேர்காணலில், தமது தாய் டயானா ஏமாற்றப்பட்டதால்தான் அவரது மனநிலை மேலும் பாதித்து அவருக்கும் தனது தந்தைக்கும் இடையே பிணக்கு அதிகரித்தது என கேம்பிரிட்ஜ் கோமகன் வில்லியம் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது மக்களுக்கு நீதி வழங்க விரும்பாத அரசோடு இணைந்து செயற்பட முடியாத நிலைமை இலங்கை விடயத்தில் உருவாகி வருகின்றது என இனப் படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நா.வின் முன்னாள் விசேட ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் பிரதிநிதிகள் சபையை கலைத்து பிரதமர் தேர்தலுக்கான புதிய திகதிகளை அந்நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரி அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14.72 கோடியை தாண்டியுள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட பி1617 கொரோனா வைரஸ் திரிபால் சிங்கப்பூரில் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அத்தகைய கொரோனா திரிபுகள் குழந்தைகளை அதிகளவில் தாக்கும் வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

துறைமுக நகர் சட்டமூலத்தில் சாதகமும் பாதகமும் காணப்படுவதால், நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லையென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

சீனாவின் டாலிக் பகுதியில், இன்று இரவு 7.18 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

பாடசாலை அபிவிருத்திக்காக முன்னைய நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பித்த  திட்டத்தை கைவிட்டு பொதுமக்களின் பொது வரிப் பணத்தை தவறாக பயன்படுத்துவதாக தற்போதைய அரசாங்கம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி