முல்லைத்தீவு - கேப்பாப்புலவு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பொலிஸார், விமானப் படையினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர்   பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர், கேப்பாப்புலவில் தனிமைப்படுத்தப்பட்டுய்யனர்.

அவர்களது தனிமைப்படுத்தல் முறையற்றதெனக் கண்டித்து, முல்லைத்தீவு நகரம் மற்றும் கேப்பாப்புலவு விமானப்படை தளத்துக்கு முன்னால் இன்று (15) ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்தே, முல்லைத்தீவு நகர் மற்றும் கேப்பாப்புலவு விமானப்படை முகாம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கேப்பாப்புலவு விமானப்படை தளத்துக்கு முன்னாள் பொலிஸார், விமானப்படையினர், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, கண்காணிப்பும் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கேப்பாப்புலவு விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமுக்கு, இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் உள்ளிட்டவர்கள் வருவதை தடுப்பதற்காக பல்வேறு வீதி தடைகளில் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி