அநுராதபுரம் மாவட்டத்தின் திரப்பனை, இங்கினியாகம கிராம மக்கள் தண்ணீர், மின்சாரம், மலசலகூடம் போன்ற அடிப்படைத் தேவைகள் இன்றி தவித்து வருகின்றனர்.

கழிப்பறை கட்ட அதிகாரிகள் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்கிராமத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கு ஏற்கனவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திரப்பனை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

ஒரு வீடு மற்றும் மூன்று மலசலகூடங்களை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் உதவியுள்ளதுடன் எதிர்காலத்தில் ஏனைய வசதிகளையும் செய்து தருவதாக பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி