அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (22) மனுத்தாக்கல் செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் 105 வயதான மூதாடி ஒருவர் இன்று உயிரிழதுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருகோணமலை கரையை அண்டிய பகுதியில் தூண்டில் மற்றும் சிறு வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்யும்  மீனவர்கள், திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் இன்று (22) காலை கவனயீர்ப்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது பட்டம் பெறவிருந்த சகல மாணவர்களும் நடந்து கொண்ட விதம் மிகவும் நாகரிகமானது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தென்அமெரிக்கா நாடான சிலியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 35 வயது இளம் இடதுசாரி தலைவரான கேப்ரியல் போரிக் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிக இளம்வயது அதிபர் என்ற பெருமையை போரிக் பெற்றுள்ளார். கேப்ரியல் போரிக், 35 வயதாகும் இவர் தான் சிலி நாட்டின் அதிபர் பதவியை அலங்கரிக்க இருக்கும் இளம் கம்யூனிஸ்ட் தலைவர். அதிபர் பதவி புதிது என்ற போதும் கடந்த காலங்களில் சிலி அரசின் முடிவுகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டக்களங்களில் கேப்ரியல் போரிக் மிகவும் பிரபலம்.

வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

92 வகை பெற்றோல் ஒரு லீற்றர்  மூலம் அரசாங்கத்துக்கு 69 ரூபா இலாபம் கிடைக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான் பாடகி சயாகா கன்டா (35). இவர் பிரோஸன் படத்தை  ஜப்பானில் மொழி பெயர்த்து பிரபலமானர்.  இவர் ஜப்பானின் பிரபல பாடகர் மாட்சுடா சீகோவின் மகள். கடந்த சனிக்கிழமை அன்று சப்போரோ திரையரங்கில் "மை பேர் லேடி" என்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால், வெகு நேரம் கடந்தும் பாடகி சயாகா வரவில்லை. ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டியிருந்தனர்.

மலையகத்தின் இருவேறு பகுதிகளில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இன்று இருவர் உயிரிழந்துள்ளனர்.நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெப்லோ பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 67 வயதான வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைக்கு ஏற்ப பேருந்துக் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டுமென தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கம் கூறுகிது.

வடமாகாண மீனவர்களின் போராட்டத்தையடுத்து இலங்கை கடற்படையினரால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றிவளைப்புகளில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி தென்னிந்திய மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராடுவேன்,அதுவரை அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை என மூத்த தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் உறுதியளித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், வடக்கு கிழக்கு மாகாணத்தில் சீனாவின் தலையீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி