கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் இறுதிச் சடங்குகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதில் அரசாங்கத்தின் கடுமையான நிலைப்பாடு பௌத்த பிக்குகளிடையே பிளவிற்கு வழிவகுத்துள்ளது.தகனம் செய்வதற்கு எவ்வித அறிவியல் அடிப்படையும் இல்லாததால், வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு துறவிகளை உள்ளடக்கிய சர்வமத குழு ஒன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து இரண்டு தினங்கள் கடந்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்று உடல்கள் அனைத்தையுமம் எரியூட்டுமாறு கோரி, பல தேசியவாத பௌத்த அமைப்புகள் ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்தை நடத்தியுள்ளன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் கம்பஹாவின் யக்கல பகுதியில் உள்ள பெரிய அளவிலான தேங்காய் எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உளவுத்துறை சிறப்பு விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தொழிற்சாலை தீப்பிடித்ததாகவும், ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ரூ 750 இலட்சம் அதிகமான தொகை பெறப்பட்டதாகவும் வந்த புகாரின் பேரில் சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாஸா எரிப்புக்கு எதிராக எட்டு வயது சிறுவன் நுஹ்மானும் அவரது தந்தையும் கவனயீர்ப்பு நடைபாதை ஒன்றினை கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று வரை இன்று திங்கட்கிழமை ஆரம்பித்தனர்.

ஜனாஸா தகனம் செய்யும் விடயத்தில் முஸ்லிம் மக்களுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிற்கும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக, வவுனியாவில் நேற்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதுமுள்ள திரையரங்குகள் வரையறுக்கப்பட்ட ஆசனங்களுடன் ஜனவரி முதலாம் திகதி முதல் திறக்கப்படும் என திரைப்படக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

பொதுஜனபெரமுன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சமர்ப்பிக்கும் வேட்பாளர்களிற்கு போட்டியிடுவதற்கு இடமளிக்காத பட்சத்தில் மாகாணசபை தேர்தல்களில் கட்சி தனித்து போட்டியிடவேண்டியிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்வதைப் போல உணர்கிறேன் என்று இராஜங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.2015 ஆம் ஆண்டில் ஒரு முக்கியமான கட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டதா என்று சந்தேகிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கொத்தமல்லி என்று கூறி உக்ரைனில் இருந்து 28 விவசாயக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.இதன் பின்னால் ஒரு பிரபலமான ஒருவரின் மகன் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக lankatruth.com தெரிவித்துள்ளது.

பசில் ராஜபக்ஷவின் அழுத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல பௌத்த துறவிகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக அரச உள் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் பார் அசோசியேஷன் தேர்தலுக்காக டிசம்பர் 18 அன்று ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தைத் தொடர்ந்து, இலங்கை ராணுவ நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் அவர்களது அலுவலகத்தில் உள்ள மற்ற அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குளியலறையில்  வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு காயப்பட்ட தனது தாயை வேறு வழியின்றி அரச வைத்தியசாலைக்கு எடுத்துச்  சென்றபோது அவருக்கு கொரோனா என்று சொல்லி எரித்தார்கள் முஸ்லிம் தாய்க்கு நடந்த கொடூரம், இன்று பலாத்காரமாக எரித்து சாம்பலாக்கினர் - மகன் கதறல்

சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளமாக 1000 ரூபாய் வழங்க பிராந்திய பயிர்ச்செய்கை நிறுவனங்கள் (RPCs) இணங்கியுள்ளதாக ‘அருன’ என்ற சிங்களப் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

சட்டத்தரணிகளான ஷிரால் லக்திலக மற்றும் கீர்த்தி தென்னகோன் மற்றும் அசாத் சாலி உட்பட இரண்டு முன்னாள் ஆளுநர்னர்களும் சஜித்தின் கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது, சஜித் பிரேமதாச தலைமையிலான 'சமகி ஜன பலவேகய' அதிகாரிகள் அவர்களை எந்த பதவியிலும் நியமிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்.

கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் மற்றும் லக் சதொச ஆகிய நிறுவனங்கள் அடுத்த திங்கட்கிழமை முதல் இரண்டு புதிய தலைவர்களைக் கொணடு இயங்கவிருப்பதாக வர்த்தக அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, சிறைச்சாலை தலைமையகத்தின் பிரதி ஜெனரலாக பணியாற்றிய வழக்கறிஞர் வெணுர குணவர்தன, இ.தொ.காவின் தலைவராகவும், சிவில் பாதுகாப்புத் துறையின் முன்னாள் பணிப்பாளருமான ரியர் அட்மிரல் ஆனந்தா பீரிஸ் ஆகியோர் புதிய தலைவர்களாக நியமிக்கப்படவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

அரச சேவையில் இணைந்துகொண்ட, பல்லாயிரக்கணக்கான புதிய பெண் பணியாளர்களின்  மகப்பேற்று விடுமுறையை  பாதியாகக் குறைப்பதற்கான, நிலையான விதிமுறைகளை மீறும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு நாட்டின் முன்னணி தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி