யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் சுயாதீன ஊடகவியலாளரின் சகோதரன் தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்து பிரதமர் அலுவலகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் பிரதமர் அலுவலகத்தினால் மரணம் தொடர்பில் உரிய விசாரணை நடாத்துமாறு யாழ்ப்பாணத்தில் விசேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் விசாரணைக்கென்று நியமிக்கப்பட்ட பொலிஸாருக்கு ஊடகவியலாளரான சகோதரன் சாட்சியம் வழங்கினார்.

இவ்வாறுள்ள நிலையில் நேற்று இரவு அவரது இல்லத்திற்கு அருகில் இனந்தெரியாத நபர்கள் தன்னை அச்சுறுத்தும் விதமாகச் செயற்பட்டதாக யாழ்ப்பாணத்தில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி