நேற்று (20) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. அதன்படி அனைத்து எரிபொருள் விலைகளும் கீழ்கண்டவாறு உயர்ந்துள்ளன.

அதன்படி,

# 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 177 ரூபாவாக அதிகரிக்கவுள்ளது.

இதன் விலை 157 ரூபாவிலிருந்து 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

# 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 23 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் புதிய விலை 207 ரூபாய். முன்பு பெட்ரோல் விலை லீட்டருக்கு 184 ரூபாயாக இருந்தது.

# புதிய விலை உயர்வால் ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் விலை ரூ.111ல் இருந்து ரூ.121 ஆக உயர்ந்துள்ளது. இதன் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

# ஒரு லீட்டர் சூப்பர் டீசலின் புதிய விலை 159.

 144 ரூபாவாக இருந்த விலையை 15 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

#. இதேவேளை, விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது மண்ணெண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. அது 10 ரூபாய்.

 அதன்படி ரூ.77 ஆக இருந்த மண்ணெண்ணெய் லீற்றரின் புதிய விலை ரூ.87 ஆக உள்ளது.

மத்திய வங்கியின் முன்மொழிவு!

பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளை அதிகரித்து எரிபொருள் தேவையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மத்திய வங்கி நிதி அமைச்சருக்கு முன்னதாக கடிதம் எழுதியிருந்தது.

தற்போதைய டொலர் பற்றாக்குறைக்கு தீர்வாக எரிபொருள் தேவையை குறைக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு டிசம்பர் 10ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் இறக்குமதிக்கு அதிக அந்நியச் செலாவணி செலவு ஏற்படுவதால் நாடு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அதன்படி ஒரு லீற்றர் பெற்றோல் 35 ரூபாவினாலும் டீசல் 24 ரூபாவாலும், மண்ணெண்ணெய் லீற்றருக்கு 11 ரூபாவாலும் அதிகரிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜாதிக சேவக சங்கமய பெற்றோலிய தொழிற்சங்க கிளையின் அமைப்பாளர் ஆனந்த பாலித,

பெட்ரோலுக்கு 35 ரூபாவாலும், டீசலுக்கு 24 ரூபாவாலும், மண்ணெண்ணெய் லீற்றருக்கு 11 ரூபாவாலும் அதிகரித்து எரிபொருள் பாவனையை குறைக்குமாறு மத்திய வங்கி நிதி அமைச்சருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது மத்திய வங்கி அதிகாரிகளிடம் கேட்கின்றேன் உலக சந்தையில் எரிபொருளின் விலை பீப்பாய் ஒன்றுக்கு $15க்கும் குறைவாக இருக்கும் போது ஏன் இலங்கையில் உயர்வடைந்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் குறைவு!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையிலேயே, இலங்கையில் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

ஒக்டோபர் 20 அன்று, ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய்யின் விலை $ 85.82 ஆக இருந்தது, இன்று 17 சதவீதம் குறைந்து $ 71.24 ஆக இருக்கின்றது.

எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பான இந்தச் செய்திகள் தொடர்பில் 'அத தெரண' மேற்கொண்ட விசாரணையில், இலங்கை மத்திய வங்கி இந்தச் செய்தியை உறுதிப்படுத்தவுமில்லை  மறுக்கவுமில்லை என்றும் தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை..

இந்த நெருக்கடி காரணமாக நாட்டின் எரிபொருள் இருப்பு இன்னும் 10 நாட்களுக்கு போதுமானது என்ற வதந்தி தொடர்பாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் வினவியபோது, ​​அடுத்த வருடம் ஜனவரி 18 ஆம் திகதி வரை இலங்கைக்கு எண்ணெய் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடன் கடிதங்களை திறப்பதில் சிக்கல் இருந்தாலும், வாரந்தோறும் நான்கு அல்லது ஐந்து எரிபொருள் தாங்கிகள் நாட்டிற்கு வரவிருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றார்.

16ம் திகதி எடுக்கவிருந்த முடிவு!

டிசம்பர் 16 நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் அன்றைய தினம் இரவு 8.00 மணியளவில் பதில் நிதி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்  தலைமையில் நடைபெறவிருந்த இந்த சந்திப்பு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகன நெரிசல் காரணமாக அன்றிரவு குறித்த சந்திப்பு இரத்துச் செய்யப்படுவதாகவும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தனது முகநூலில் தெரிவித்திருந்தார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி