கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்கான பிரதேப்பெட்டிகளுக்கான பணத்தை அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களிடமிருந்து அறவிடுகின்றனர் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

17 வயது மாணவனை சுட்டுக்காயப்படுத்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட மருத்துவரை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று இரண்டாம் அலையால் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில் தம்மை விடுவிக்கக் கூறி இலங்கையில் பல சிறைச்சாலைகளின் கூரைகளில் ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம் செய்கின்ற சூழ்நிலையில், கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில், குறைந்தது 80 நாடுகளில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான கைதிகளை விடுவிக்க அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பதா ? புதைப்பதா? என்பது தொடர்பில் ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் முதற்கட்ட தீர்மானம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் தின நிகழ்வுகளை பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் விதிகளையோ காரணம் காண்பித்து தடை செய்ய முயற்சிக்கக் கூடாது என தெரிவித்து வட மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் மற்றும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு சமர்ப்பிக்கப்பட்ட எழுத்தாணை விண்ணப்பங்களை யாழ்.மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கரைவெட்டி பறவைகள் சரணாலயம் கண்டுகொள்ளப்படாத நிலையில் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கொவிட் 19 தொற்றிய நபராக அடையாளம் காணப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருரை இரண்டாவது PCR பரிசோதனை செய்யாமல் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார ​சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்

தற்போதைய நிலைமை காரணமாக புலம்பெயர்ந்த அனைத்து தொழிலாளர்களையும் ஒரே நேரத்தில் திரும்ப அழைத்து வருவது நடைமுறை சாத்தியமில்லை என்றும், அவர்கள் ஓர் ஒழுங்கு முறையில் திருப்பி அழைக்கப்பட வேண்டும் என்றும் தொழில் அமைச்சர் நிமல்  சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

லடாக்கில், சீன மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) மைக்ரோ வேவ் ஆயுதங்கள் எனப்படும் நுண்ணலை ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக வெளிவந்த இணைய தள ஊடகச் செய்திகளை இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை அன்று முற்றிலுமாக மறுத்துள்ளது.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களைத் தவிர ஏனைய பிரதேச பாடசாலைகளை இம்மாதம் 23ம் திகதி திங்கட்கிழமை திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக. இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் பேராசிரியர ஜீ.எல். பீரிஸ் அறிவித்துள்ளவாறு 6ம் தரத்திலிலிருந்து 13 தரம் வரை மாத்திரம் பாடசாலைகள் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபரின் மனைவியின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

தனிமைப்படுத்தல் முகாமாக பயன்படுத்தும் போகம்பரை பழைய சிறைச்சாலையிலிருந்து கடந்த 17ம் திகதி இரவு சில கைதிகள் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனையை வழங்கிய நீதிபதி அதற்காக தனக்கு பதவி உயர்வுவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட நீதிபதி துமிந்த சில்வாவிற்கு வழங்கிய தண்டனை உட்பட தனது சேவைக்காக பதவி உயர்வை கோரியுள்ளார் என ஆணைக்குழு முன்னிலையில் தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள சூரரைப்போற்று திரைப்படத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வேடத்தில் நடித்தவர் ஷேக் மைதீன். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த இவர் அப்துல் கலாமைப் போன்ற உருவ தோற்றம் இருப்பதால் பிரபலமடைந்தவர். இதனால், 'உடுமலை கலாம்' எனவும் அழைக்கப்பட்டவர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி