இந்தோனேசியாவில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி உள்ளது.இந்தோனேசியாவில் அமாஹாய் நகரில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி பளைப் பிரதேச பொது வைத்தியசாலையில் போதிய வைத்தியர்கள் மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறை காரணமாக தொடர்ந்து பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்டகாலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் எல்லாவற்றிற்கும் மேலாக பொருளாதார பாதுகாப்பை விரும்புவதாகவும், அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் உதவியை கோருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மும்பையில் கடற்படை தளத்தில்  ஐஎன்எஸ்  ரன்வீர் கப்பலில் வெடி பொருள் வெடித்ததில்  3  கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் தமிழர் பிரச்சினை தொடர்பான தீர்வுக்காக இந்திய பிரதமருக்காக தயாரிக்கப்பட்ட ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரின் கடற் பகுதியில் பளபளப்பாக எழும்பியிருக்கும் துறைமுக நகரை "பொருளாதார மாற்றத்துக்கான காரணி" என்று அதிகாரிகள் வர்ணிக்கிறார்கள்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (18) காலை 10 மணிக்கு ஆரம்பமானது.

பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் நெல் சந்தைப்படுத்தலை மாவட்டத்திற்குள் மட்டுப்படுத்தக்கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு செங்கலடி சவுக்கடி பகுதியில் இடம்பெற்ற வழிப்பறி கொள்ளைச்சம்பவம் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துனிசிய ஜனாதிபதியிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளுமாறு சமகி ஜன பலவேகய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தமிழ் திரைப்படங்கள் தவிர இந்தி படங்களிலும் நடித்து உள்ளார். ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்து உள்ளார். தற்போது தமிழில் அதிக படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.

கூட்டாக இணைந்து திருடுவதே ஆட்சியாளர்களின் பொதுக்கொள்கையாக அமைந்துள்ளது என ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடு பாரதூரமான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும். வரலாற்றில் என்றுமில்லாத வகையில் மக்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

இத்தாலியின் மிலான் நகருக்கான இலங்கையின் தூதரக அதிகாரியாக பதவி வகித்த நீலா விக்கிரமசிங்க திடீர் சுகயீனம் காரணமாக காலமானார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் வாய்களுக்குப் பூட்டுப் போடுவதற்கு 'மொட்டு' கட்சியினர் முயற்சிக்கின்றனர் எனவும், ஆனாலும் உண்மைகளைக் கதைப்பதற்கு நாம் தயங்கமாட்டோம் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி