யாழ்.மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா எதிர்வரும் 16ஆம் திகதி காலை 8.30 மணி முதல் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - கூழாவடி பகுதியில் உள்ள புகையிரதக் கடவை கடந்த சில வாரங்களாக திறந்த வண்ணமே காணப்படுவதால் பல விபத்துக்கள் மற்றும் மக்களின் உயிர் போகும் நிலையில் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று காலை சென்ற தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, தனது சாட்சியம் வாக்குமூலம், தமிழில் இருந்து சிங்கள மொழிக்கும், சிங்களத்தில் இருந்து தமிழ் மொழிக்கும் உரை பெயர்ப்பு செய்யப்பட்டாலும், இறுதியில் தான் கையெழுத்திடுவதாயின், அந்த ஆவணம் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் திட்டவட்டமாக ஆணைக்குழு விசாரணையாளர்களுக்கு அறிவித்ததால், விசாரணை இடை நடுவில் நிறுத்தப்பட்டு, பிறிதொரு உசிதமான தினத்தில் நடத்த முடிவாகியது.

உலகம் முழுவதும் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.  இதுவரை 30 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 05 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்லி சம்பிக்க ரணவக்கவின் விரிவான மருத்துவ பரிசோதனை அறிக்கையை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்ற மருத்துவ அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை அரசியலில் ஆட்சியை உருவாக்கக்கூடிய பெரும் புள்ளியாகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணைமீதான விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 200 ரூபாவை அண்மித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு நிலையில், அதனை பெறுவதற்கு நாளாந்தம் மக்கள் நீண்ட வரிசையில் கால் வலிக்க காத்து கிடக்கின்றனர்.

வெளிநாட்டு கையிருப்பு குறைவினால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கையில் மருந்து பொருட்கள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையின் சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை போலீஸ் திணைக்களத்தில் கடமையாற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, இந்தி மொழி பாடத்திட்டமொன்றை, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆரம்பித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பான நான்கு கோப்புகள் தன்னிடம் இருப்பதாகவும், அவை தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சவால் விடுப்பதாகவும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்று (11) தெரிவித்தார்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை முன்றலில் பிரதேச சபை செயலாளரை அச்சுறுத்தியவரை கைது செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

விவசாயிகளின் 07 கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகளின் தேசிய மாநாடு நேற்று (10) பொலன்னருவை புலதிஸி மண்டபத்தில் நடைபெற்றது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் இன்று காலை 5வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி