பாதுகாப்பு செயலாளராக தான் இருந்த போது, பித்தளைச் சந்தியில் தன்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை ஆரம்பித்ததாகவும், பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, தான் அதனை முடித்து வைத்ததாகவும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சட்டபூர்வமற்றது எனவும் அதனை அகற்றிவிட்டு அறிவிக்கும்படி பணிக்கப்பட்டதாலும் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்

கொரோனா தொற்றுக்குள்ளான பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அவர் கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்ததாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட மூத்த பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க மகள் தனது தந்தையின் கொலைக்கு ஐ நா அமைப்பிடம் நீதி கோரி கோரியுள்ளார்.`சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த லசந்த கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி காலை பணிக்குச் செல்லும் போது இராணுவத்துடன் தொடர்புடைய கூலிப் படைகள் என்று குற்றஞ்சாட்டப்படுபவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று கிளம்பிய சிறிது நேரத்தில் காணாமல் போனது.இந்த விமானத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விமானத்தில் 130 பயணிகள் செல்ல முடியும் என்றபோதும் சரியாக எத்தனை பயணிகள் இருந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தலா ஒரு ஆள் பிணையில் அவர்களை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், பல்கலைக்கழக நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நேற்று இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது.

எமது மக்களின் பிரச்சினைகளை முதலில் நாங்கள் தேசியமயப்படுத்த வேண்டும். அதில் நாங்கள் இன்னும் வெற்றிபெறாத நிலையில், அதனை சர்வதேசமயமாக்கிக் கொண்டிருப்பதில் எவ்விதமான பயனும் இல்லை என்பதே நாம் கற்றறிந்த பாடங்களாக இருக்கின்றன என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதை அடுத்து, நேற்றிரவு அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.மாணவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் நேற்றிரவு முதல் பல்கலைக்கழகத்திற்கு முன்பாகக் கூடியிருந்தனர்.யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி அழிக்கப்படும் காட்சி சமூக வலைத்தளங்களில் நேற்றிரவு வௌியானது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில்

"கோதபாய ராஜபக்ஷ" வெல்வதை

நான் ஆதரித்தேன்.

இதற்கு பல காரணங்கள் இருந்தன.

ஆசிரியர் ஒருவரை அச்சுறுத்தியுள்ளதோடு, அவரை வெளியேற்றியதாக ஜனாதிபதி கல்வி பணிக்குழுவில் உறுப்பினராக செயற்படும், கொழும்பில் அமைந்துள்ள பிரபல மகளிர் பாடசாலையின் அதிபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி (U.N.P) தலைவர் இலங்கை மக்களுக்கு இந்தியா தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெயசங்கரிடம் கோரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதியை சாபத்திற்குள்ளாக்கிய ஐந்து பேர் இருப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாந்து தெரிவித்தார். நேற்று (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ 'FAIL' தான் என்று மெடில்லே தேரர் கூறுகிறார்.அமெரிக்க எம்.சி.சி ஒப்பந்தத்தில் இலங்கை முகவரான பசில் ராஜபக்ஷ ஒரு நல்ல வேலையைச் செய்துள்ளார், விரைவில் ஜனாதிபதியை அவர் வீட்டிற்கு அனுப்புவார் என்று சிங்கலே அமைப்பின் பொதுச் செயலாளர் மெடில்லே பன்னாலோக​ தேரர் தெரிவித்தார்.

அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டடத்துக்கு வெளியேயும், உள்ளேயும் குவிந்த டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்துகொண்டிருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் முதல் வருடத்தில், இலங்கையில் தாய்மார் இறப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்தியர்கள் சங்கத்தின் புதிய தலைவரை நியமிப்பது குறித்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய சுகாதார அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி