கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இனவாத இராஜ்ஜியம் உருவாகியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அரச இணையத்தளங்களை இலக்கு வைத்து .LK என பதிவு செய்யப்பட்டுள்ள சில இணையத்தளங்கள் (LK domains) முடக்கப்பட்டுள்ளதாக .LK இணையத்தள பதிவாளர் பேராசிரியர் கிஹான் டயஸ் தெரிவித்தார்.

மேற்கத்தைய வானம் (பட்டகிர அகச)  பியாவி போன்ற பிரபலமான தொலைக்காட்சி நாடகங்களை இயக்கிய இயக்குனர் சா​மர ஜனராஜ் பீரிஸ் தனது (உத்துரு சுலங்க) 'வடக்கு காற்று' திரைப்படத்தை மார்ச் 5 முதல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

இலங்கைக்கு இரண்டு தேசிய கீதம் எவ்வாறு அறிமுகம் செய்தார்கள் என்று எங்களுக்கு தெரியாது. ஒரே நாடு ஒரே கீதம். இந்தியாவில் பல மொழி பேசும் மக்கள், பல இனத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு தேசிய கீதமே. அன்று பிரித்தானியர்கள் வழங்கிய அனுமதிக்கு இன்றும் நாம் தீர்க்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறோம்.

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

73 ஆண்டுகால சுதந்திரத்தை கொண்டாடும் நம் நாட்டின் சாதனைகள் போதாது என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஒரு தெளிவான வேலைத்திட்டம் தேவை என்றும், இலவசக் கல்வியின் பயனாளியாக அதற்கு பங்களிக்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

”கொரோனா  தொற்றுக்கு வெக்சின் தாராங்க எல்லாருக்கும் கிடச்சா நல்லாருக்கும். ஏன்னா நோய் குணமாகிருமே?” என்கிறார் திருகோணமலையைச் சேர்ந்த மொஹமட் இர்பான், ”எல்லாருக்கும் ஊசிய போட்டுட்டா வேல முடிஞ்சுரும். நோய் வராதே” என்கிறார் கொழும்பைச் சேர்ந்த நிர்மலன் சுவாமிநாதன். ”அதான் ஊசி வந்துட்டே பிறகென்ன எல்லா இடத்துலயும் சுற்றித்திரியலாம். வழமபோல எங்கட சோலிய பாக்கலாம்” என்கிறார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவசிதம்பரம் கிரி.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானம் வருத்தமளிப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, திருகோணமலை, அலஸ் தோட்டம், இறை இரக்க திருத்தலம் முன்பாக சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம், இன்று (04) காலை 7 மணிக்கு ஆரம்பமானது.

எங்கள் முன்னோர்கள் கஞ்சாவை ஒரு மருந்தாகப் பயன்படுத்தினர் அதை புகையிலை நிறுவனங்களை நம் நாட்டிற்கு இறக்குமதி செய்வதை தடை செய்தனர். 73 ஆண்டுகளுக்குப் பிறகும் எங்களால் அந்த நிலைமையை மாற்ற முடியவில்லை.

இலங்கையின் மனித உரிமைகள் பதிவை கடுமையாக விமர்சித்திருக்கும் ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அறிக்கை, தற்போதைய அரசாங்கத்திற்கு "தீங்கிழைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும்" அந்த அறிக்கையை கண்டனம் செய்து அரசாங்கம் அதை நிராகரிக்க முடிவு செய்துள்ளதுள்ளதாகும் அறிக்கிடைக்கின்றது

டெல்லி எல்லையில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு சர்வதேச பாப் பிரபலம் ரியான்னா ஆதரவு தெரிவிக்கத் தொடங்கியதும் தற்போது அந்த விவகாரத்தில் பாலிவுட் பிரபலங்களும் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் தடைகளைத் தாண்டி இடம்பெற்று வருகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி