இறுதிப் போரில் நந்திக்கடல் பிரதேசத்தில் பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் இழுத்து வந்து நாய்கள் போல் சுட்டேன் என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷவின் குற்றஒப்புதல் வாக்குமூலம் நிச்சயம் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய குற்ற ஒப்புதல் வாக்குமூலமேதான்.

மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து  வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கையை  இடைநிறுத்துமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் உண்மைக்குப்புறம்பான கருத்துகளை வெளிப்படுத்தி எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதுவருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தலைநகர் அருகே நன்கு அறியப்பட்ட ராஜமஹா விகாரையில் யானை குட்டி ஒன்று நீண்ட காலமாக கொடூரமாக சித்திரவதை செய்யப்படுவதற்கு எதிராக அமுல்படுத்தப்படாவிட்டால், பொலிஸ் மாஅதிபருக்கு எதிராக  வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் சட்டத்தரணி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


சிரேஷ்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாக 150 சட்டத்தரணிகள் பொலிஸ் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டமை சட்டத்தரணிகள் தொழிற்சங்கத்தின் நற்பெயருக்கும் சுயாதீனத்தன்மைக்கும் அழுத்தம் விடுக்கக்கூடும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் பாதியளவு இடிந்த ஒரு மருத்துவமனையில் பல நோயாளிகளும், ஊழியர்களுC சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன.இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 34 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பல இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது.

நீண்டகாலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை துரிதமாக விசாரித்து விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் ரவிக்குமார், நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் முன்வைத்தார்.

“இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும். இல்லையேல் இந்த நாடு சர்வதேச அரங்கில் பேராபத்தைச் சந்திக்கும்.” என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

காத்தான்குடி தனிமைப்படுத்தல் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ( 18) ம் திகதிவரை நீடிப்பு!காத்தான்குடி பொலிஸ் பிரதேசத்தில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை 18ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

என் அன்பான ரஞ்சன், நீங்கள் எதிர்கொண்டுள்ள துரதிர்ஷ்டவசமான நிகழ்வைக் கேட்டு நான் அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறேன். 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 48 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென்று எல்லையில்லா ஊடகவியலாளர்கள் அமைப்பு கோரியுள்ளது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்கு புறப்பட்ட ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-500 ரக விமானம் ஒன்று கடந்த 9 ந்தேதி புறப்பட்டு சென்றது.

மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்குகிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் இருந்தது.லோகேஷ் கனகராஜ் பாணியில் அழுத்தமான திரைக்கதையுடன் கூடிய படமாக இருக்குமா அல்லது விஜய் பாணியில் அதிரடி ஆக்ஷன் படமாக இருக்குமா என்ற கேள்வியும் இருந்தது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி