பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் எவரையும் அரசியல் கைதிகள் என அடையாளப்படுத்த  விரும்பவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வங்கி கணக்கில் இருந்து மூன்றரை கோடி ரூபாயை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது பதவிக் காலத்தில் இலங்கையில் எவ்வித மனித உரிமை மீறல்களும் நடக்கவில்லை என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உரைக்கு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்று கூறப்படும் வி.உருத்திரகுமாரன் சவால் விடுத்துள்ளார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையை வலியுறுத்திய மோடி, இதுபற்றிய விவாதத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளராக செயற்பட்ட தயாமாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளராக கலாநிதி ரொஹந்த அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் பல வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை அடுத்து இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் சுசந்த பெரேரா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய உதித லொக்கு பண்டார சுமார் 30 மில்லியன் ரூபாயை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பசோவில் அதிபர் ராக் மார்க் கிறிஸ்டியன் கபோரை கிளர்ச்சிப் படைகள் அகற்றி ஆட்சியை கைப்பற்றினர்.

அவசர நிலை காரணமாக கொழும்பு நவலோக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது குணமடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசியப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக கூட்டாட்சி கட்டமைப்பை உருவாக்கி, அதன் மூலம் தமிழரின் சுயநிர்ணய உரிமையையும், 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதையும் உறுதிப்படுத்தும் ஆவணமொன்றை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளிடமும் கையளிக்கத் தீர்மானித்துள்ளதாக டெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர், தமிழ் சாரதி ஒருவர் மீது முள்கம்பித் பொல்லால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை எதிர்வரும் 7 ஆம் திகதி ஏல விற்பனைக்கு விடப்படுவதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ள நிலையில் இதனை மனிதாபிமான அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் கடற்றொழில் அமைச்சிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

 மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்களாக நீதி கிடைக்காத தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

சம்பூரில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்காக இந்தியாவின் அரச நிறுவனமான NTPC எனப்படும் National Thermal Power Corporation Limited நிறுவனத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி