கோத்தாபயவின் ஆட்சியில் லட்சணம் இதுதான் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பதவிகள்! புபுது ஜயகொட
தான் அதிகாரத்திற்கு வந்தால் உறவினர்கள் நண்பர்களுக்கு எந்தப் பதவியும் வழங்கப் போவதில்லையென ஜனாதிபதி கோத்தாபய தேர்தலுக்கு முன்பு கூறினாலும், இன்று அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் தான் வாக்குறுதிகளுக்கு புறம்பாக உறவினர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட கூறுகிறார்.