ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடாத மக்கள் இன்று நாட்டில் உள்ளனர் என்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறுகிறார்.அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பதே தனது ஒரே நோக்கம் என்று நிதியமைச்சர் கூறியுள்ளதோடு, இந்த முயற்சிக்கு தனக்கு உதவுமாறு உள்ளூராட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படத்தை இணையதளத்தில் தரவிறக்கம் செய்து விற்பனை செய்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் நுவரெலியா பிரதேச புலனாய்வுப் பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

சீதுவ பகுதியில் பொலிஸ் எஸ்.டி.எஃப் இணைந்து மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் லலித் பிந்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து புதிய ‘குவாட்' கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக துமிந்த சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நியமனம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவியிருக்கும் கடிதம் குறித்து ஜனாதிபதி செயலகத்தின் சிரேஸ்ட அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது, ​​ஜனாதிபதி இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்ததை உறுதிப்படுத்தினார்.

எதிர்வரும் 2023ஆம் ஆண்டளவில் பலமிக்க ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் அமைக்கப்படும் என அந்த கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியில் தொடர்ந்தும் நீடிப்பதா, இல்லையா என்பது குறித்து எதிர்வரும் 21ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகளை வளைத்துப் போட, நிதியமைச்சரை மாற்றி, தூதுவர்களைச் சந்தித்துக் கோரிக்கை விடுப்பது மாத்திரம் போதாது என்று கூறியுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், இலங்கை அரசாங்கம் தனது,  "போலி தேசியவாத" கொள்கையை மாற்ற வேண்டும். இனவாதத்தைக் கைவிட்டு, தமிழ், முஸ்லிம்  மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா தற்போது மும்பையில் வசித்து வருகிறார், மிஷன் மஜ்னு படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.இதில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடிக்கிறார்.

கோட்டாபய - மஹிந்த அரசாங்கத்தின் அடக்கு முறை ஆட்சி மற்றும் பொருள் விலையேற்றம் என்பவற்றை கண்டித்து வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி