1200 x 80 DMirror

 
 

''யுகதனவி“ அனல் மின்சார நிலைய உற்பத்தி தேசிய மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, 100 மெகாவோட்ஸ் மின்சாரம் தேசிய உற்பத்தியுடன் இணைக்கப்படுகிறது.

தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையை சட்டரீதியாக இல்லாதொழிக்க வேண்டும் என நீதியமைச்சர் எதேச்சாதிகாரமாக கூறியிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

எந்தவொரு அறிவியல் பூர்வான காரணங்களும் இன்றி கொவிட் தவிர்ப்பு (Exit Strategy) வழிகாட்டியை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளதாக சுகாதார சேவையின் முன்னணி தொழிற்சங்க தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபரை பெண் ஆசிரியர் தாக்கியதில் அதிபர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் தற்போதைய டொலர் நெருக்கடியை சமாளிக்க மத்திய வங்கி ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் பெரும் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, புறக்கோட்டையில் கறுப்புச் சந்தை முதலாளிகளின் கதையைக் கூறி முழுமையாக நிலைமையை சீர்குலைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

கடலில் சாவதை விட வீதியில் சாவோம் என யாழ் மீனவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். தமிக மீனவர்களின் அத்துமீறல்களை எதிர்த்து யாழில் மீனவர்கள் கன்வனயீர்ப்பு ஆர்ப்பட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் உயிரிழந்துள்ளார்.

உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது கறுப்புச் சந்தையில் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தியே இலங்கை வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கியதாக நிதியமைச்சர் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மோசமான மனித உரிமைகள் அறிக்கை ஜெனீவா மனித உரிமைக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு, சிறைவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் சிலரை விடுவிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆனால் அரசியல் கைதிகள் என்ற பதத்தை அவர் மறுத்திருந்தார்.

கிட்டுபூங்கா பிரகடனத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.

‘ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி ஞாயிறன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. பேரணியின் நிறைவில் 'கிட்டுபூங்கா பிரகடனம்' தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் வெளியிடப்பட்டது.

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி