1200 x 80 DMirror

 
 

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின்

முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குப் பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோரை கைது செய்ய தீர்மானம் எடுக்கப்படவில்லை என சட்டமா அதிபர் இன்று (20) உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு  குறித்து  தம்மைக் கைது செய்வதை தடுக்குமாறு கோரி ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த மனு நீதியரசர்களான பிரீத்தி பத்ம சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
 
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளதாக குறிப்பிட்டார்.
 
விசாரணைகள் இன்னும் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாகவும் மனுதாரர்களைக் கைது செய்வது குறித்து தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 
 
எவ்வாறாயினும், அவர்களைக் கைது செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்தால், அத்தகைய முடிவை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கும் பிரேரணை தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறினார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி