எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் இராணுவத்தினரை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் அதிருப்பதி வெளியிட்டுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் வெளியேற்றம் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளது.இந்த அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பும் மலையகப் போராட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
நேற்று கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. அங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரி குறிப்பிட்ட கதையொன்று உள்ளது.
உரம் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடமும், நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் அதிகரித்துவரும் வாழ்க்கை செலவு மற்றும் அத்தியவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தற்போதைய அரசின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
புத்தாண்டு காலம் வரை லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக 'லிட்ரோ' நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை உயர்வினால் இலங்கையின் எரிவாயு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
12.5 கிலோ எடையுள்ள ஒரு எரிவாயு சிலிண்டரினால் தற்போது லிட்ரோ நிறுவனத்திற்கு சுமார் 2000 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ விளம்பரத்துறை அதிகாரிகள் குழு அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது.
எவ்வாறாயினும், விலை அதிகரிப்பால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியத்தை கருத்தில் கொண்டு புத்தாண்டு வரை லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டாம் என கோரிக்கையை முன்வைத்து நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக நிறுவனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், Laughfs Gas நிறுவனம் 12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலையை 4230 ரூபாவாக அதிகரித்துள்ளது.
சந்தையில் லாஃப்ஸ் எரிவாயுவிற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், லாஃப்ஸ் நிறுவனம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை கூட சந்தைக்கு வெளியிடுவதில்லை என லிட்ரோ தெரிவித்துள்ளது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவின அமைப்பு தொடர்பில் ரட்டே ராலவுக்கு அவ்வளவு தெளிவில்லை. இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தொடக்கம் முதன் நிலை தலைவர்கள் அதில் இருப்பார்கள்.
நேற்று இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே ஒரு பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. எமது நாட்டுக்கு அத்தியாவசியமாக இருக்கக்கூடிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இந்தியா வழங்கிய கடனிலிருந்து நிபந்தனையோடு பெற்றுக் கொள்வதாகும்.
இலங்கையில் ஒரு கிலோ அரிசி விலை 200 ரூபாயைத் தாண்டிவிட்டது. பெட்ரோல், டீசல் விலை 250 ரூபாயைக் கடந்துவிட்டது. ஒரு முட்டை 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 90 சதவிகிதம் அளவுக்குக் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 23ஆம் திகதி சர்வகட்சிக்குழு மாநாடு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ள நிலையில் அதில் பங்கேற்பது குறித்தும் பிரதான கட்சிகள் பலவும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றன.
“வடக்கு மக்களை நாம் மறக்கவும் மாட்டோம் கைவிடவும்மாட்டோம்.” என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.யாழ்ப்பாண விசேட பொருளாதார மத்தியநிலையத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.
இன்று (20) பிற்பகல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கடவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் பெறுவதற்காக வரிசையில் நின்ற 70 வயதான முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.