நேற்று இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே ஒரு பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. எமது நாட்டுக்கு அத்தியாவசியமாக இருக்கக்கூடிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இந்தியா வழங்கிய கடனிலிருந்து நிபந்தனையோடு பெற்றுக் கொள்வதாகும்.

அந்த கடனில் 75 வீதமான பயன்படுத்த வேண்டும் இந்தியாவிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு. ஏனைய 25 வீதம் இந்தியா உற்பத்தி செய்யாத ஏனைய நாடுகளிலிருந்து தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு பயன்படுத்த முடியும்.


அரசாங்க பக்கத்தில் அந்தக் கடனைப் பெற்றுக் கொள்வதனை காட்ட முனைவது பெசிலின் அபூர்வமான ஒரு வேளை என்ற அடிப்படையில். உண்மையில் நாடு இவ்வாறான ஒரு மோசமான நிலைக்கு சென்று அதன் பின்னர் தோல்வியை வெற்றியாக காட்ட முனைகின்ற ஒரு கடல் கன்னியை போன்ற கூட்டம் உருவாகி இருக்கின்றது.

அந்த கடனால் இந்தியா எத்தனை தடவை இலாபம் பெறுகின்றது. கடனுக்கு வட்டியை செலுத்த வேண்டும். அடுத்ததாக இந்தியாவில் இருந்து எமது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களை விற்பனை செய்து அதன் மூலமாக பெறுகின்ற இலாபம். அது மாத்திரமல்ல இந்தியா எமது நாட்டின் உள்ளே அவர்களது வியாபார செயற்பாடுகளை ஊக்குவிக்கும். அடுத்ததாக இந்தியாவுக்கு முன்னால் நாங்கள் தலைகுனிந்த ஒரு தேசத்தவறாக மாறுகிறோம்.

இந்தியாவுக்கு முன்னர் மாத்திரமல்ல அதேபோன்று வெட்கமில்லாமல் எத்தனை தடவை இவ்வாறான கடன்களை நாங்கள் பெற்றிருக்கின்றோம். பெற்றதனால் இவ்வாறான நிலைக்கு உட்பட்டிருக்கின்றோம். பங்களாதேஷ் பாகிஸ்தானிடம் இருந்து 200, 300 மில்லியன் கணக்கான டொலர்களை நாங்கள் பெற்றிருக்கின்றோம்.


கடந்த தினம் ஒன்றில் பாகிஸ்தான் IMF இடம் இருந்து பெற்றுக் கொண்ட கடனிலிருந்து நாம் 200 மில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக் கொண்டோம். உண்மையில் பெசில் கடன் எடுப்பதில் வல்லமை உடையவர். அதனை சரியாக குறிப்பிடுவதாக இருந்தால் பெசில் என்பவர் பிச்சை எடுப்பதற்கு வல்லவர்.

எமது சமூகத்தில் ஒரு கதை இருக்கிறது. அம்மா வழங்குவதாக கூறினால் அப்பா மரத்தில் கட்டியாவது சரி அதனை வழங்குவார் என்று. உண்மையில் அரசியல் அர்த்தத்தில் நாங்கள் இதனை பார்த்தால் பெசில் அவ்வாறான ஒருவர். அதாவது இன்று நாட்டை பிச்சை எடுத்து சாப்பிடுகின்ற நிலைக்கு மாற்றியவர்கள் ராஜபக்சக்களே. பிச்சை எடுத்து சாப்பிடுவது தவிர வேறு பதில் எங்களுக்கு இருந்தாலும் ராஜபக்சக்கள் பிச்சை எடுத்து சாப்பிடுவதைத் தவிர வேறு எந்த ஒரு பதிலும் அவர்களிடம் காணப்படவில்லை.

இருப்பினும் இந்த பிச்சை எடுத்து சாப்பிடல் என்பது ஒரு புதிய பரிமாணம் கொண்டதாக இருக்கின்றது. இதனை சரியாக குறிப்பிடுவதாக இருந்தால் இவர்கள் மேற்கொள்வது நாட்டை அடகு வைத்து பிச்சை எடுத்து சாப்பிடுவது ஆகும். அந்த மொழியில் குறிப்பிடுவதாக இருந்தால் அப்பாவை மரத்தில் கட்டிவிட்டு அம்மாவை வழங்கியது போன்று ஆகும். கைகூப்பி, கைநீட்டி எத்தனை தடவைகளாவது அதனைவிட பரவாயில்லை. நாட்டை அடகு வைப்பதனால் ஏற்படும் தரகுப்பணம் செல்வது ராஜபக்ச குடும்பத்திற்கே.


நாட்டை அடகு வைத்த பின்னர் பெற்ற கடன் அனைத்தையும் வைப்புச்செய்வது நாட்டினுடைய கணக்கில். அதனைக்கொண்டு உரிய வேலை திட்டங்களை நடைமுறைப்படுத்துவது கிடையாது .அதில் ஒரு பகுதியை களவெடுப்பார்கள்.

ஏனைய பகுதியில் தேவையற்றவைகளுக்கு செலவழிப்பார்கள்.பெசில் இந்த நிதியை இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள கடன் நிதியை முயற்சி செய்தது ஒரு மாதத்திற்கு ஒன்றரை மாதத்துக்கு முன்னர் ஆகும். இருப்பினும் அந்த சந்தர்ப்பத்தில் இந்தியா அதனை மறுதலித்தது. இந்தியா குறிப்பிட்டது உங்களுக்கு கடன் தேவையாக இருந்தால் இருந்தால் சில விடயங்களை செய்துவிட்டு வாருங்கள் என்று.

இந்த முறை பேசி அந்த விடயங்களை செய்து விட்டுத்தான் இந்தியாவுக்குச் சென்றார். சம்பூர், மன்னார்,பூநகரி,போன்ற பல சக்தி திட்டங்களை இந்தியாவுக்கு அவர் வழங்கியிருக்கின்றார். அதன் பின்னர் தான் இந்தியா கதவைத் திறந்தது.

பொருளாதார பிரச்சினை அதாவது முன்னர் இருந்த தேசப்பற்று தற்பொழுது வெளியேறியுள்ளது, தேசப்பற்று கீழ் நிலைக்கு சென்றுவிட்டது. தற்பொழுது மக்கள் கேட்பது நாட்டை இந்தியாவுக்கு விற்பனை செய்து தேவையான பொருட்களை வழங்குங்கள் என்று.


அதை நாங்கள் ஒரு நாளைக்கு எத்தனை தடவைகள் வரிசையிலிருந்து கேட்கின்றோம். அந்த நிலைக்கு மக்களுடைய உள்ளம் காணப்படுகின்றது. இந்த நாட்டினுடைய மக்கள் நுகர்வு மனப்பாங்கு தற்பொழுது உயர்ந்தபட்சமாக இருக்கின்றது. அதன்மூலம் ராஜபக்சக்கள் மைதானத்தை தயார் செய்து வழங்கியுள்ளனர்.

நாட்டைவிற்பனை செய்து சாப்பிடும் வகையில். தற்போது அவர்கள் அந்த மைதானத்தில் விளையாடுகிறார்கள். எமது நாட்டின் நிதி அதிகாரம் இருப்பது பாராளுமன்றத்துக்கு. இருப்பினும் நாட்டினுடைய நிதியமைச்சர் மூன்று மாதத்திற்கு மேலாக நாட்டின் நிலவரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் எந்த ஒரு விடயத்தையும் குறிப்பிடவில்லை .அது உண்மையிலேயே மிக பாரதூரமான ஒரு நிலையாகும்.

அடுத்ததாக நாங்கள் இவ்வாறு கடன் பெறுவதன் மூலம் எமது நாட்டுக்கு இன்னும் இன்னும் கடன் சுமை அதிகரிக்கின்றது. எங்களுக்கு கடனை செலுத்த முடியாமல் இருக்கின்றது. அதனால் அதனை எந்த ஒருவருக்கும் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இந்த மாதம் போன்று அடுத்த மாதம் சீனாவுக்கு வழங்க வேண்டிய கடன் கொடுக்க முடியாமல் இருக்கின்றது. உண்மையில் நாங்கள் வங்குரோத்து நிலையில் இருக்கின்றோம். கடந்த முறை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட 900 மில்லியன் டொலர் கடன் இந்தியாவுக்கு நாங்கள் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


இருப்பினும் நீங்கள் நினைக்கக் கூடியதாக இருக்கும் கடன் செலுத்த இயலாத ஒருவருக்கு பிச்சை எடுத்துத்தான் சாப்பிட வேண்டியேற்படும். இல்லை என்றால் இருப்பதனை விற்பனை செய்ய வேண்டும். அடுத்ததாக கடன் செலுத்த முடியாத ஒருவருக்கு மீண்டும் கடனை வழங்குவது என்ன மூடத்தனம். உங்களுக்கு நினைக்கத் தோன்றுகின்றது இந்தியா அவ்வாறான ஒரு மூடத்தனமா என்று .

முன்னர் அவ்வாறே சோவியத் தேசம் இருந்தது. இந்தியா இவ்வாறான கடனை நாடு என்ற அடிப்படையில் எங்களுக்கு சாதகமற்ற வகையில் அவர்களுக்கு சாதகமான நிபந்தனைகளை எல்லாம் முன்வைத்து விட்டு வழங்குகின்றது. சுருக்கமாக சொல்லப்போனால் நாட்டினுடைய முக்கியமான இடங்களை இந்தியா கைப்பற்றும்.

பெசில்தன் இந்தியாவுக்கு தேவையான நபர். அடுத்ததாக அதற்கான உட்கட்டமைப்பு்வசதிகளினை பேசி இருக்கக் கூடியவர் நல்ல ஒரு மனிதர். அவர்தான் மிலிந்த மொரகட, பெசில்,மஹிந்த, கோட்டாபய போன்றோர் இப்பூமியோடு எந்த பிணைப்பும் இல்லாதவர்கள். அதனால் எந்தவொரு விடயத்தையும் தேடிப்பெற்றுக்கொள்பவர் பெசில்.


அடுத்ததாக இந்த கீழ்தரமான அரசாங்கம் தற்போது நினைத்துக்கொள்வது இவை யாவற்றுக்கும் ஐஎம்எப் சென்று தான் தீர்க்க முடியும் என்று. உண்மை சர்வதேச நாணய நிதியத்திற்கு தெரியும். நாங்கள் கடனை செலுத்துவதற்காக கடனை பெறுகின்ற ஒரே ஒரு நாட்டவர் என்று. எந்த ஒரு பொறுப்பும் இல்லாமல் இவர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்கின்றார்கள்.

நாம் இந்த நாட்டில் செய்வது அனைத்தும் பிழைத்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்திற்கு ஓடுவதாக. இறுதியாக ரூபா பெறுமதியை குறைத்தது போன்று. தற்போது சர்வதேச நாணய நிதியம் இடத்திற்கு சென்று இதனை தீர்க்க முடியாது. இது குறித்து அரசாங்கம் குறிப்பிட்டது நாங்கள் எதிர்கட்சியின் கோரிக்கையை செய்து விட்டோம் என்று. உண்மையில் இந்த மூடத்தனமான அரசாங்கம் தேவையான சந்தர்ப்பத்தில் எந்த ஒரு விடயத்தையும் செய்யவில்லை. எல்லா விடயங்களையும் காலம் தாழ்த்தியே செய்தது.

அடுத்து சீனாவுடன் வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்ய முற்படலாம். சீனாவுக்கு கடனைச் செலுத்துவதற்கு முடியாமையால் சீனாவுக்கு வழங்கும் கப்பமே அது. எமது நாட்டில் இரண்டு நாடுகளுக்கிடையே சுங்க வரிச் சலுகையை இல்லாமல் செய்தமையால் பொருட்கள் அங்குமிங்கும் செல்வதற்கு தேவையான சந்தை நிலவரத்தை ஏற்படுத்தியுள்ளோம் என இந்த ராஜபக்சக்கள் குறிப்பிடுகின்றார்கள்.
நாட்டில் உள்ளவர்கள் அதனை ஏற்றுக் கொள்கின்றார்கள்.

இறுதியில் குருதியில் சீனாவின் பொருட்கள் மூலம் நாங்கள் எமது சந்தையை நிரப்ப வேண்டிவரும். உற்பத்திகளுக்கு இறைவனுடைய அருள். வலு சக்தியில் ஏகாதிபத்திய தன்மையை அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு வழங்குவார்கள்.அதேபோன்று சீன பொருட்களின் ஏகாதிபதித்தியமும் இருக்கும். இருப்பினும் அதன்போது வரிசை காணப்படமாட்டா.

எமது அனைத்தையும் இல்லாமல் செய்த ஒரு கோழை மிக்கவர்களாக உலகத்திற்கு முன்னாள் நாங்கள் நிற்க வேண்டி ஏற்படும். தற்போது நீங்கள் கேட்கலாம் அப்படியாயின் தீர்வு என்னவென்று.ரட்டே ரால குறிப்பிடும் முதலாவது தீர்வு ராஜபக்சக்களை விரட்டியடிக்க வேண்டும். இருப்பினும் அந்த தீர்ப்புக்கு முன் இந்த நாட்டில் தேசிய உடன்பாடு மட்டும் பொது கருத்தாடல் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். உண்மையில் அந்த கருத்தாடல் தற்போது உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் ராஜபக்சக்களை விரட்டி அடிக்க முடியும் என்பது உறுதி. அதேபோன்று விரட்டியடிக்க வேண்டும் என்பதும் உறுதி.


இருப்பினும் அவ்வாறு விரட்டியடித்து மீண்டும் யாரை கொண்டு வரல் என்ற ஒரு பிரச்சினை இருக்கின்றது. அதற்கான வேலைத் திட்டமொன்று இல்லாமல் அதே போன்று ராஜபக்சக்களின் வேலையை தொடர்ந்து செய்பவரை கொண்டுவந்து ஏமாறுவதா. அடுத்ததாக நாட்டை மீட்கும் நம்பிக்கையோடு செயற்படக்கூடிய ஒருவர் காணப்படுவதாக இல்லை .

அவ்வாறு இந்த நிலத்தின் உள்ளே இருக்கக்கூடிய ஒரே ஒரு விடயமாக இருப்பது பொது உடன்பாடு என்ற விடயம்தான். யாரிடமும் இருக்கக்கூடிய நல்ல விடயங்களை ஒன்று சேர்த்து ஒரு உடன்பாட்டை நாங்கள் ஏற்படுத்த வேண்டும். தற்போது இருக்கக்கூடிய ஒரே ஒரு பதில் அதுவே.


அப்படியாயின் போய் வருகின்றேன்

கடவுள் துணை, வெற்றி கிட்டட்டும்

இப்படிக்கு

ரட்டே ரால

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி