மத்தல சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை, இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, 30 வருட காலத்திற்கு கையளிக்க,

 அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் முகாமைத்துவத்தை, இந்தியாவின் M/s Shaurya Aeronautics (Pvt) Ltdக்கும் ரஷ்யாவின் Airports of Regions Management Company மற்றும் அதனுடன் இணைந்த தொழில் முயற்சியாளர்களுக்கு 30 வருடகாலத்திற்கு ஒப்படைப்பதற்காக, துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளைப் பயன்படுத்துவதற்காக ஆர்வங் காட்டுகின்ற தரப்பினர்களிடமிருந்து விருப்புக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்காக 2023.01.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, விருப்புக் கோரல்கள் பெறப்பட்டுள்ளதுடன், 5 நிறுவனங்கள் விருப்புக் கோரல்களைச் சமர்ப்பித்துள்ளன. இதன்படி, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவின் விதந்துரைக்கமைய, மேற்படி இரு நிறுவனங்களுக்கும், மத்தல சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை, 30 வருட காலத்திற்கு கையளிக்க,  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 

01 WhatsApp Tamil 350

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி