எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கெஸ்பேவவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை இனந்தெரியாத சிலரால் தாக்கப்பட்டு அமைச்சரின் சாரதி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


உயிரிழந்தவர் பிலியந்தலை மாவிட்டரை கம்வனவத்தை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


தாக்குதலுக்கு உள்ளான குறித்த நபர், பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


119 அவசர அழைப்புக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


குறித்த சாரதியின் வீட்டின் முன்னால் பாரிய சத்தத்துடன் பல தடவைகள் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து சாரதி வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி